/indian-express-tamil/media/media_files/2025/02/07/UpTM9eX4Icf8EAtEE5EX.jpg)
சில நேரங்களில், சமையலறையில் நம் பாட்டிமார்கள் செய்யும் எளிமையான ரெசிபிகளின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இருக்காது. மசாலா வாசனைகள், தூக்கலான காரம் என எதையும் சேர்க்காமல், குறைந்த பொருட்களைக் கொண்டு செய்தாலும் அபாரமான ருசியைக் கொடுக்கும் வித்தைதான் அந்த சமையல். அப்படி ஒரு பாரம்பரிய சுவையுடன் நம் வயிற்றையும் மனதையும் நிறைக்க வந்துள்ளதே இந்த 'மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார்'. காரசாரமான சைடிஷுடன் சேர்த்து அள்ளி ஊற்றி சாப்பிடத் தூண்டும் அந்த சூப்பர் சிம்பிள் சாம்பார் ரெசிபி எப்படி செய்வது என்று காத்துவாக்குல சமையல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு 1 கப்
தண்ணீர் 4 கப்
சின்ன வெங்காயம்
தக்காளி 3 
உப்பு
மஞ்சள் தூள்
சீரகம்
புளி
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை 
கொத்தமல்லி 
செய்முறை:
ஒரு கப் துவரம்பருப்பை நன்கு அலசிய பின் பிரஷர் குக்கரில் சேர்க்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர், சின்ன வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், சீரகம் மற்றும் மூன்று பழுத்த தக்காளி சேர்த்து நன்கு கலந்து விடவும். குக்கரை மூடி, மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். பருப்பு வெந்த பின், அதை மத்து கொண்டு நன்கு கடைந்து (மசித்து) எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கருவேப்பிலை மற்றும் உங்கள் காரத்திற்கு ஏற்ப கிள்ளிப் போட்ட காய்ந்த மிளகாயைச் சேர்க்கவும். இதை நன்கு வதக்கிக் கொள்ளவும். வதக்கிய தாளிப்பை, கடைந்து வைத்த பருப்புடன் சேர்த்து விடவும். ஒரு எலுமிச்சை பழம் அளவு புளியை கரைத்து, அந்தப் புளிக் கரைசலையும் சாம்பாருடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக, கொத்தமல்லி தழைகளைத் தூவி, ஒரு கொதி வரும் வரை கொதிக்க விட்டால், அருமையான மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் தயார். சூடான சாதத்துடன் பரிமாறவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us