/indian-express-tamil/media/media_files/2025/10/11/chut-2025-10-11-18-28-57.jpg)
பொதுவாக நாம் காலையோ, இரவோ உணவு உண்ணும் பொழுது அதற்கு என்று தனியாக ஒரு குழம்பு வைக்க வேண்டும். இட்லி - தோசை என்றால் அதற்காக சட்னியோ, சாம்பாரோ வைக்க வேண்டும். இட்லி, தோசைக்கு வைக்கும் சாம்பார், சட்னியை சுலபமாக வைக்கவும் முடியாது. அதற்கு என்று தனியாக காய்கறிகளை நறுக்க வேண்டும். வேக வைக்க வேண்டும் என ஒரு பெரிய புராஸஸ்ஸே இருக்கு.
அதிலும், கொடூர பசியில் வீட்டிற்கு வருபவர்கள் அவர்களே இந்த வேலைகளையெல்லாம் செய்து உணவு உண்பதற்குள் பசியே போய்விடும். அந்த நேரத்தில் பலரும் யாராவது நமக்கு இத செஞ்சி தரமாட்டார்களா என்று புலம்புவதும் உண்டு. இனிமேல் இப்படி புலம்ப வேண்டாம். வீட்டில் இருக்கும் ஐந்து பொருட்களை வைத்து நொடி பொழுதில் எப்படி சட்னி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பச்சைப்புளி சட்னி
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய்
புளி
வெங்காயம்
பூண்டு
வெல்லம்
செய்முறை
காய்ந்த மிளகாயை ஊற வைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு புளியையும் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த புளி மற்றும் காய்ந்த மிளகாய் உடன் சிறிய வெங்காயத்தைச் சேர்க்க வேண்டும். இதனுடன், கொஞ்சம் பூண்டு மற்றும் வெல்லத்தைச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் கொஞ்சம் உப்பு மட்டும் சேர்த்து பரிமாறுனீர்கள் என்றால் சட்னி சூப்பராக இருக்கும்.
கட்டி மீதி சட்னி
தேவையான பொருட்கள்
காஷ்மீர் மிளகாய்
பூண்டு
புளி
வெல்லம்
செய்முறை
10 காஷ்மீர் மிளகாயை சுடு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதனுடன், கொஞ்சம் பூண்டு, புளி, வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் கட்டி மீதி சட்னி ரெடி. இந்த இரண்டு சட்னியும் பார்பதற்கு ஒன்றாக தெரிந்தாலும் அளவுகளில் வேறுபாடு இருக்கிறது. இந்த சட்னியை எளிய முறையில் சீக்கிரமாக செய்வதன் மூலம் உங்கள் நேரமும் மிச்சமாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us