சும்மா பஞ்சு மாதிரி ஆப்பம்... 2 கப் அரிசிக்கு இம்புட்டு உளுந்து போதும்!

சாஃப்ட் அண்ட் டேஸ்டியான அப்பத்திற்கு எப்படி மாவு அரைப்பது என்று தெரியாதவர்கள் மற்றும் முதல் முறை ஆப்பம் செய்ய விரும்புபவர்கள் கூட இந்த முறையை ட்ரை பண்ணலாம்.

சாஃப்ட் அண்ட் டேஸ்டியான அப்பத்திற்கு எப்படி மாவு அரைப்பது என்று தெரியாதவர்கள் மற்றும் முதல் முறை ஆப்பம் செய்ய விரும்புபவர்கள் கூட இந்த முறையை ட்ரை பண்ணலாம்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
appam x

ஆப்பம் மாவு செய்ய பலரும் அரிசியையும் உளுந்தையும் அதிக அளவில் சேர்த்து, மாவு புளிக்காமல் கஷ்டப்படுவார்கள். ஆனால், அந்த தவறை இனி செய்ய வேண்டாம்! ஆப்பம் பஞ்சு போல வர, அதிக உளுந்து தேவையில்லை. 2 கப் அரிசிக்கு சரியான அளவில் உளுந்து, இவற்றுடன் கொஞ்சம் சேர்க்க வேண்டிய ரகசியப் பொருள் ஒன்று இருக்கிறது. இந்த அளவுகளைப் பின்பற்றி ஒரு முறை ஆப்பம் சுட்டுப் பாருங்கள், உங்கள் குடும்பமே உங்களை மெச்சும். இது மிகக் குறைந்த உளுந்து சேர்த்து செய்யப்படும் பாரம்பரிய முறை. இதனை எப்படி செய்வது என்று ஷெரின்ஸ் கிச்சன் அஃபிஷியல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
உளுந்து     - ஒரு கைப்பிடி
வெந்தயம் -    1/2 டீஸ்பூன்    
சமைத்த சாதம் 
தேங்காய் பால்     
உப்பு  

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து, 3 அல்லது 4 முறை நன்கு அலசவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் வரை நன்கு ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசி, உளுந்துடன், சமைத்த சாதம் (அல்லது அவல்) சேர்த்து, சிறிதளவு தேங்காய் பால் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

மாவு மிகவும் மென்மையாக, தோசை மாவை விட சிறிது தளர்வாக இருக்க வேண்டும். கிரைண்டரில் அரைத்தால் மிகச் சிறந்த மென்மை கிடைக்கும். மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கரைக்கவும். ஆப்ப மாவை எப்போதும் பெரிய பாத்திரத்தில் வைக்கவும், புளிக்கும் போது பொங்கி வழியாமல் இருக்கும்.

Advertisment
Advertisements

அரைத்த மாவை அறை வெப்பநிலையில் 8 முதல் 12 மணி நேரம் புளிக்க விடவும். மாவு நன்கு புளித்து, உப்பி மேலே வந்திருக்க வேண்டும். (குளிர்காலமாக இருந்தால் அதிக நேரம் தேவைப்படலாம்.) புளித்த மாவை மெதுவாகக் கலக்கவும். அது மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்த்து ஆப்பம் சுடும் பதத்திற்கு (ஊற்றிச் சுற்றும் பதத்திற்கு) கொண்டு வரவும்.

ஒருவேளை மாவு சரியாகப் புளிக்கவில்லை என்றால், ஆப்பம் சுடும் முன் அப்பச் சோடாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து மாவில் கலந்து கொள்ளலாம். ஆனால், சரியாகப் புளித்த மாவுக்கு இது தேவையில்லை. ஆப்பச்சட்டியை மிதமான தீயில் வைத்து, ஒரு துளி எண்ணெய் தடவி சூடேற்றவும்.

ஒரு கரண்டி மாவை எடுத்து சட்டியில் ஊற்றி, சட்டியை வட்டமாகச் சுழற்றி மாவை ஓரங்களில் பரப்பவும். நடுவில் மாவு சற்று அதிகமாக இருக்கும். சட்டியை மூடி வைத்து, மிதமான தீயில் ஓரங்கள் சிவந்து, நடுப்பகுதி வெண்மையாக, பஞ்சு போல மாறும் வரை வேக விடவும். ஆப்பம் வெந்ததும், மெதுவாக சட்டியில் இருந்து எடுத்து, இனிப்பான தேங்காய் பால் அல்லது காரமான சால்னா உடன் சூடாகப் பரிமாறவும். இப்போது உங்கள் வீட்டில் சுவையான, பஞ்சு போன்ற ஆப்பம் தயார். அதிக உளுந்து சேர்க்காமலேயே மிகச் சிறந்த ஆப்பத்தைச் சுட்டு அசத்துங்கள்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: