/indian-express-tamil/media/media_files/2025/10/07/hair-growth-2025-10-07-13-09-48.jpg)
முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும், குறிப்பாக விடுதிகளில் தங்கி நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்து சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவை விரும்புபவர்களுக்கும் இந்தக் கருவேப்பிலை பொடி ஒரு சிறந்த தீர்வாகும். இதனை ஈஸியாக செய்து ஒரு மாதம் வரை கூட சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதில் சேர்க்கப்படும் கருவேப்பிலை மற்றும் முருங்கைக்கீரை ஆகியவை முடி வளர்ச்சிக்கு உகந்த சத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த ஹெல்தியான பொடியை வீட்டில் எப்படி செய்வது என்று மோனிஷா சமையல் ன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை
முருங்கை கீரை
உளுந்து - 1 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
எள்ளு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 10
பூண்டு - 3 பல்
பெருங்காயத்தூள்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில் கருவேப்பிலை மற்றும் முருங்கை கீரையை நன்கு கழுவி, சுமார் மூன்று நாட்கள் நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, காய வைத்த கருவேப்பிலையைச் சேர்த்து, கருவேப்பிலை மணம் வரும் வரை வறுத்து தனியே எடுக்கவும்.
அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, காய வைத்த முருங்கை கீரையைச் சேர்த்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வறுத்து எடுக்கவும். ஒரு கப் உளுந்து, ஒரு கப் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் எள்ளு மற்றும் இரண்டு ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வெறும் கடாயில் (Dry Roast) வறுத்து எடுக்கவும். மற்றொரு ஸ்பூன் எண்ணெயில் 10 வரமிளகாயை வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
அதே கடாயில் மூன்று பல் தட்டிய பூண்டு, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும். இப்போது வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களும் ஆறிய பின், மிக்ஸி ஜாரில் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நைஸான பொடியாக அரைத்து எடுத்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான கருவேப்பிலை பொடி தயார். இந்த பொடியை இட்லி, தோசை, ஊத்தாப்பம் அல்லது வெள்ளை சாதத்துடன் கூட வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை ஒரு மாதம் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.