/indian-express-tamil/media/media_files/2025/09/17/thanni-chutney-2025-09-17-12-12-05.jpg)
இட்லி, தோசைக்கு உடனடியாக ஒரு 'மேஜிக்' சட்னி ரெசிபி உங்கள் கைகளில். வெறும் மூன்று நிமிடங்களில், மிகக் குறைந்த பொருட்களை வைத்து, வெங்காயம், தக்காளி, பூண்டு எதன் வாசனையும் இல்லாமல், அசத்தலான சுவை தரும் ஒரு சட்னியை எப்படி செய்வது என்று காயுஸ் கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். சமைக்க நேரம் இல்லாதபோது அல்லது ஃபேச்சுலர்ஸ்கூட் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி சட்டுன்னு சமையல் பண்ணிடலாம்.
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை
காய்ந்த மிளகாய்
புளி
கறிவேப்பிலை
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து லேசாகச் சூடாக்கவும். அதில் பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, எண்ணெய் விடாமல் லேசாக வறுக்கவும். பொட்டுக்கடலையின் நிறம் மாறாமல், மிளகாய் மற்றும் கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரை வறுத்தால் போதும். இந்த வாசனைதான் சட்னிக்கு கூடுதல் சுவை சேர்க்கும். வறுத்த பொருட்களை ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்கவும்.
ஆறிய வறுத்த பொருட்கள், எடுத்து வைத்த புளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். முதலில் தண்ணீர் விடாமல் ஒரு முறை ஓட்டி, பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, கெட்டியான சட்னியாக அரைக்கவும். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். ஒரு சிறிய தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும், கிள்ளிய காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பொரிய விடவும். இந்த தாளிப்பை அப்படியே சட்னியின் மேல் ஊற்றி நன்கு கலக்கினால், மணமணக்கும் சட்னி தயார். தாளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால், சட்னியின் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். புளியின் அளவு கூடிவிட்டால் சட்னியின் சுவை கெட்டுவிடும். சிறிய அளவு புளி போதுமானது. இந்த சட்னி இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us