/indian-express-tamil/media/media_files/2025/10/15/mint-chutney-2025-10-15-15-42-39.jpg)
நம் அன்றாட காலை உணவில் நாம் அதிகம் சாப்பிடுவது இட்லி, தோசை தான். இதில் இட்லி அனைவரும் விரும்பும் ஒரு உணவாக உள்ளது. பொதுவாக இட்லி ஆவியில் வேக வைத்து எடுக்கப்படுவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக உள்ளது.
ஆறு மாதத்தில் முதலில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பொழுது பலரும் இட்லியை தான் குழந்தைகளுக்கு பரிந்துரைப்பார்கள். ஏனென்றால் இட்லி பஞ்சு மாதிரி இருப்பதால் வேகமாக செரிமானமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், குழந்தைக்கு சாப்பிட ஏதுவாக இருக்கும் என்பதால் பலரும் இட்லியை பரிந்துரைப்பார்கள்.
பொதுவாக நாம் இட்லிக்கு சட்னி அல்லது சாம்பார் ஊற்றி சாப்பிடுவோம். சட்னி என்றால் தொட்டு சாப்பிடுவோம். ஆனால், சட்னியை ஊற்றி இட்லி சாப்பிட்டுள்ளீர்களா? இந்த சட்னி செய்தால் இட்லிக்கு சட்னியை தொட்டு சாப்பிடமாட்டீர்கள் ஊற்றிதான் சாப்பிடுவீர்கள். அது என்ன சட்னி என்றால் தக்காளி புதினா சட்னி. இதை எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு
பெரிய வெங்காயன்
தக்காளி
காய்ந்த மிளகாய்
புதினா
உப்பு
செய்முறை
ஒரு வானலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். இதில் கடலை பருப்பு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு காய்ந்த மிளகாய், புதினா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தாளிப்பு போட்டு இறக்கினால் சுவையான சட்னி ரெடி. இந்த சட்னியை தொட்டு சாப்பிடாமல் பஞ்சு மாதிரியான இட்லிக்கு அப்படியே ஊத்தி சாப்பிட்டால் சுவை அடி தூளாக இருக்கும்.
புதினா மணம் மற்றும் சுவைக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது. புதினாவில் உள்ள 'மெந்தோல்' (Menthol) என்னும் வேதிப்பொருள் செரிமானத்திற்குத் தேவையான செல்களை தூண்டி, செரிமான மண்டலத்தைத் தளர்த்துகிறது. இதனால் அஜீரணம், வயிறு உப்புசம், வாய்வு தொல்லை மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகள் குறைகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.