மழை காலத்துல டாக்டர் செலவு மிச்சம்... கொதிக்க வச்சு சுண்டி இறக்கிய இந்த ரசம் கொஞ்சம் குடிங்க: செஃப் டிப்ஸ்!

மழைக்காலங்களில் அடிக்கடி சளி பிடித்தல், மூக்கு அடைப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அவை அனைத்தையும் சரிசெய்ய உதவும் ஒரு ரசம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மழைக்காலங்களில் அடிக்கடி சளி பிடித்தல், மூக்கு அடைப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அவை அனைத்தையும் சரிசெய்ய உதவும் ஒரு ரசம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
nandu rasam

மழைக்காலம் வந்துவிட்டால், கூடவே சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளும் வந்துவிடும். இந்த சமயங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், நம் பாரம்பரிய மருத்துவ முறையை நாடுவதே சிறந்த வழி. நம்முடைய சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களும், கடலுணவும் மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படும். அப்படியான ஒரு அற்புத மருந்துதான், காரசாரமான 'இடிச்சு அரச்ச நண்டு ரசம்'. நண்டில் உள்ள சத்துக்களும், மிளகு, சீரகம், பூண்டின் நோய் எதிர்ப்பு சக்தியும் சேர்ந்து, உங்கள் உடலை உடனடியாகத் தேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த ரசத்தை எப்படி செய்வது என்று ஷர்மிஜாஸ் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

நண்டு  - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1.5 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1 
புளி
மஞ்சள் தூள் 
கறிவேப்பிலை, கொத்தமல்லி
நல்லெண்ணெய், உப்பு 

செய்முறை:

ஒரு இடி உரல் அல்லது மிக்ஸியில், மிளகு, சீரகம் மற்றும் பூண்டைச் சேர்த்து கொரகொரப்பாக இடித்து (அல்லது அரைத்து) தனியாக வைக்கவும். இதுவே ரசத்திற்கு முக்கிய மணத்தையும் மருத்துவ குணத்தையும் கொடுக்கும். புளியை வெந்நீரில் ஊறவைத்து கெட்டியான கரைசல் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் தக்காளியை நன்றாகப் பிசைந்து, மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

சுத்தம் செய்த நண்டுத் துண்டுகள் மற்றும் இடித்து வைத்த மசாலா கலவையைச் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். நண்டு லேசாக நிறம் மாறினால் போதும். தயாராக உள்ள புளி-தக்காளி கரைசலை இதில் ஊற்றி, நன்றாகக் கிளறி விடவும். ரசம் நுரை கட்டி கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரசத்தின் அளவு பாதியாகச் சுண்டும் வரை (சுமார் 10-15 நிமிடங்கள்) நன்கு கொதிக்க விடவும். நண்டின் முழுச் சத்தும் ரசத்தில் இறங்க இது மிகவும் அவசியம். கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மருத்துவரின் உதவியின்றி சளி, காய்ச்சலை விரட்ட உதவும் சுவையான நண்டு ரசம் தயார். இதை சுடச்சுட சாதத்துடனோ அல்லது தனியாகவோ பருகி நிவாரணம் பெறலாம்.

Advertisment
Advertisements
Rasam Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: