/indian-express-tamil/media/media_files/2024/11/16/pT0T3ToBZ2bq5AZCcxYn.jpg)
இட்லிக்கு மாவு தயாரிக்கும்போது சரியான அளவைப் பின்பற்றினாலும் அல்லது கடைகளில் விற்கப்படும் தரமான மாவை வாங்கியிருந்தாலும், சில நேரங்களில் இட்லி கடினமாக, கல் போல வந்துவிடுகிறது. மல்லிகைப்பூ போல பஞ்சு போன்ற மிருதுவான இட்லியைப் பெறுவது ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால், கோமுஸ் லைஃப்ஸ்டைல் கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் அதற்கு ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வீட்டில் அரைத்த மாவா அல்லது கடையில் வாங்கிய மாவா என்பதைப் பொருட்படுத்தாமல், உங்கள் இட்லியைப் புசுபுசுவென்று மாற்றிவிடும். இந்த எளிய குறிப்பை மாவுடன் சேர்த்து இட்லி ஊற்றிப் பாருங்கள், இட்லி நிச்சயம் பூ போல இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு
நல்லெண்ணெய்
செய்முறை:
முதலில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சரியாக ஒரு தேக்கரண்டி (ஸ்பூன்) நல்லெண்ணெய் சேர்க்கவும். நல்லெண்ணெய் இட்லிக்கு மிருதுவான அமைப்பை வழங்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நல்லெண்ணெய் மாவு முழுவதும் சமமாகப் பரவும் வரை அதை நன்றாகக் கலந்து விடவும். எண்ணெய் மாவுடன் முழுமையாகக் கலந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இட்லிப் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதை நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்த பிறகே, மாவு ஊற்றிய இட்லித் தட்டுகளை பாத்திரத்தின் உள்ளே வைக்க வேண்டும். இட்லியை மூடி வைத்து, சரியாக 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். அதிக நேரம் வேக வைத்தால் இட்லி மீண்டும் கடினமாகிவிடும் என்பதால், சரியான நேரத்தை பின்பற்றி இட்லி மாவை வேகவைக்க வேண்டும்.
10 நிமிடங்கள் முடிந்ததும், அடுப்பை அணைத்து, இட்லித் தட்டுகளை வெளியே எடுக்கவும். இப்போது இட்லிகள் மல்லிகைப்பூ போல புசுபுசுவென்று மிகவும் மென்மையாக (சாஃப்டாக) இருக்கும். இனிமேல் இட்லி கல்லு போல வந்துவிடுமோ என்று கவலைப்பட வேண்டாம். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, சுவையான, மென்மையான இட்லிகளை எப்போதும் செய்யலாம். இந்த டிஒஸ் கடைகளில் மற்றும் வீடுகளில் செய்யும் இரண்டு மாவுகளுக்குமே பொருந்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.