பாய் வீட்டு பிரியாணி மட்டும் பேமஸ் இல்ல... இந்த சோறும் தான்; ஈஸி டிப்ஸ்!

எப்பவுமே பாய் வீட்டில் சமைக்கும் பிரியாணி என்றால் நிறைய பேருக்கு பிடிக்கும். அப்படி இருக்கையில் பாய் வீட்டில் சமைக்கும் இன்னொரு டிஷ் பற்றி தெரியுமா?

எப்பவுமே பாய் வீட்டில் சமைக்கும் பிரியாணி என்றால் நிறைய பேருக்கு பிடிக்கும். அப்படி இருக்கையில் பாய் வீட்டில் சமைக்கும் இன்னொரு டிஷ் பற்றி தெரியுமா?

author-image
Kalaiyarasi Sundharam
New Update
ghee rice

முஸ்லிம் வீடுகளில் பிரியாணிக்கு உள்ள அதே முக்கியத்துவம் இந்த நெய் சாதத்திற்கும் உண்டு. பாய் வீட்டு கல்யாணங்களில் பிரியாணிக்கு இணையாக அல்லது அதற்கு மேலாகப் புகழ்பெற்ற இந்தச் சோறு, எளிமையான செய்முறையைக் கொண்டிருந்தாலும், அதன் சுவை அலாதியானது. இது மட்டன், சிக்கன் அல்லது மீன் குழம்புக்குச் சரியான மெயின்டிஷ் ஆக இருக்கும். 1/2 கிலோ அரிசியை வைத்து, ஒரு சூப்பரான மற்றும் மணம் நிறைந்த நெய் சாதம் எப்படிச் செய்வது என்று யாஸ் ரெசிப்பீஸ் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

சாப்பாட்டு அரிசி - 2 கப்
எண்ணெய் - ¼ கப்
நெய் - 3 முதல் 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 மீடியம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் - தலா ½ கைப்பிடி
தக்காளி - ½ பழம் (சிறியது)
தயிர் - 4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - ½ டீஸ்பூன்
உப்பு

செய்முறை:

அரிசியைக் கழுவி, சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் 3 ஸ்பூன் நெய் சேர்த்துச் சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற பட்டை வகைகளைச் சேர்த்துத் தாளிக்கவும். மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி எடுக்கவும். இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு, பச்சை மிளகாய், அரை கைப்பிடி புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கிக்கொள்ளவும்.

இப்போது, அரை தக்காளிப் பழம், 4 ஸ்பூன் தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் அரை ஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும். 2 கப் அரிசிக்கு 4 கப் என்ற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், ஊற வைத்த அரிசியைச் சேர்த்து, மெதுவாகக் கிளறவும். அரிசியும் தண்ணீரும் சமமாக (ஈவனாக) வந்ததும், எஞ்சியிருக்கும் சிறிது நெய், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மூடி போட்டு, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, சரியாக 20 நிமிடங்கள் "தம்" போடவும். 20 நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து, சூடான, சுவையான பாய் வீட்டு நெய் சாதத்தைச் சுவைக்கத் தயாராக உள்ளது.

Advertisment
Advertisements
Cooking Tips ghee

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: