/indian-express-tamil/media/media_files/96iAkaejSrIYilGzcRhP.jpg)
புரட்டாசி மாதம் வந்துவிட்டால், விரதம் இருக்கும் அசைவப் பிரியர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றம் இருக்கும். இந்த மாதத்தில் அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள், அதே சுவையையும் திருப்தியையும் தரக்கூடிய ஓர் அற்புதமான சமையலைத் தேடுவது வழக்கம். அதற்கான சரியான சாய்ஸ் தான் இந்த ‘காளான் மசாலா’ (Mushroom Masala).
காளானுக்கு இயற்கையாகவே அசைவம் போன்ற ஒரு ‘வைப்’பை கொடுக்கக்கூடிய texture (வடிவம்) உண்டு. அத்துடன் இது அதிக புரதச் சத்து நிறைந்தது. இந்த மசாலா ஒரு தனித்துவமான சுவையுடன், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, பூரி மற்றும் வெள்ளை சாதம் என எல்லாவற்றுக்கும் ஒரு பெஸ்ட் சைட் டிஷ் ஆக அமையும். இந்த எளிமையான, ஆனால் சுவையான காளான் மசாலாவை எப்படி செய்வது என்று மாம் ஆஃப் பாய்ஸ் வைஷூ இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
காளான் (மஷ்ரூம்) - 300 கிராம்
சின்ன வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் - 2
தக்காளி (நறுக்கியது/அரைத்தது) - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய் (திருகியது) - 1/4 கப்
சோம்பு, சீரகம், மிளகு, கசகசா - தலா 1 தேக்கரண்டி (அரைக்க)
மஞ்சள் தூள், கரம் மசாலா, கறி மசால் பொடி - தலா 1/2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
செய்முறை:
முதலில், தேங்காய், கசகசா, சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நீர் விட்டு, மையாக அரைத்து ஒரு விழுதாகத் தயார் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க தேவையான பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய தக்காளி அல்லது அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும். மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் கறி மசால் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின், சுத்தப்படுத்திய காளானைச் சேர்க்கவும். காளான் சிறிது நேரத்தில் நீர் விடும்.
காளான் விட்ட நீர் சுண்டியதும், அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மசாலா கெட்டியாகி, எண்ணெய் மேலே பிரிந்து வரும்போது, நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால், கறி சுவையில் அட்டகாசமான காளான் மசாலா தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us