வீட்டுல ரேசன் பருப்பு இருக்கா? இப்படி பொடி செய்யுங்க; குழம்புக்குப் பதில் இத ருசிக்கலாம்!

ரேஷன் துவரம்பருப்பைப் பயன்படுத்தி சுவையான பருப்புப் பொடி தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். குழம்புக்குப் பதிலாக சூடான சாதத்துடன் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான பொடி தயார்.

ரேஷன் துவரம்பருப்பைப் பயன்படுத்தி சுவையான பருப்புப் பொடி தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். குழம்புக்குப் பதிலாக சூடான சாதத்துடன் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான பொடி தயார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
paruppu podi

வீட்டில் குழம்பு வைக்க நேரமில்லாத போதும் அல்லது சாதாரணமாகச் சமைக்க விரும்பாத போதும், சூடான சாதத்துடன் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட ஏற்றது இந்தப் பருப்புப் பொடி. ரேஷன் கடையில் வாங்கும் துவரம்பருப்பைக் கொண்டு ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இந்தப் பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம். இது குழம்புக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைவதுடன், இட்லிப் பொடியாகவும் அல்லது தோசையின் மேல் தூவியும் சாப்பிடலாம். ரேஷன் பொருளை வீணாக்காமல், இதுபோல ஒரு உபயோகமான உணவுப் பொருளாக மாற்றுவது ஒரு சிறந்த வழியாகும். இந்தப் பொடியைத் தயாரித்து காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைத்தால், இதை ஒருமாதம் வரை பயன்படுத்தலாம். இதனை எப்படி செய்வது என்று த்ரியாம்பிகா இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு (ரேஷன் அல்லது சாதாரணமானது) - 2 சிறிய டம்ளர்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு (சின்னப் பல்) - 15 முதல் 20 பல்
வரமிளகாய் - 8 முதல் 10
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
கல்லுப்பு - தேவையான அளவு (சுமார் 1 ஸ்பூன்)

செய்முறை:

ஒரு கடாயில் துவரம்பருப்பைச் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து நன்கு பழுப்பு நிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த பருப்பை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். அதே கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இடித்த பூண்டு பற்களைச் சேர்த்து, பூண்டு நன்கு பொன்னிறமாக வறுபடும் வரை வறுக்கவும். பூண்டு வறுபட்டவுடன், கூடவே 8 முதல் 10 வரமிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, கருவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.

Advertisment
Advertisements

கடைசியாக, சுமார் ஒரு ஸ்பூன் அளவு கல்லுப்பு சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும். இந்த வறுத்த பூண்டு கலவையை, முன்னரே வறுத்து வைத்த துவரம்பருப்புடன் சேர்த்து, அனைத்துப் பொருட்களும் நன்கு ஆறும் வரை காத்திருக்கவும். ஆறிய பிறகு, மிக்ஸி ஜாரில் சேர்த்து, இட்லிப் பொடியை விடவும் சற்று நைஸாகப் பொடியாக அரைக்கவும். அரைத்த பொடியை மீண்டும் தட்டில் கொட்டி முழுவதுமாக ஆறவைத்த பிறகு, ஈரமில்லாத காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். பயன்படுத்தும் ஸ்பூன் ஈரமாக இல்லாமல் பார்த்துக்கொண்டால், பொடி நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷ்ஷாக இருக்கும். 

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: