கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படியாக அரிசி இருந்தால் போதும் சட்டுன்னு ஒரு 5 ஈஸி ஸ்நாக்ஸ் செய்து விடலாம். கிராமப்புறங்களில் உள்ள பிள்ளைகளுக்கு அவர்கள் வீட்டில் அம்மாக்கள் ஈஸியாக இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பார்கள்.
அரிசி லட்டு: அரிசியை வறுத்து பொடித்துக்கொள்ளவும். வெல்லம் அல்லது சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்க்கவும். சூடான நெய் சேர்த்து நன்றாக பிசைந்து சிறிய லட்டுகளாக பிடிக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல், வறுத்த முந்திரி சேர்க்கலாம்.
அரிசி பொறி: அரிசியை லேசாக வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்கவும். உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூவி கலக்கவும். விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான அரிசி பொரி ஸ்நாக்ஸ் தயார்.
அரிசி வெல்லம்: வேகவைத்த சாதத்தை மசித்து, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சுவைக்கு நெய் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கலாம். சிறிய உருண்டைகளாக பிடித்து கொடுக்கலாம்.
பச்சரிசி தூவல்: பச்சரிசியை கழுவி ஊறவைத்து கொள்ளவும். பின்னர் அதில் உள்ள நீரை வடித்து அதில் வெல்லம், ஏலக்காய் தூ, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து சாப்பிடலாம். சாப்பாட்டு அரிசியை விட பச்சரிசியில் சுவையாக இருக்கும்.
அரிசி புட்டு: அரிசியை ஊறவைத்து பின்னர் தண்ணீர் இல்லாமல் காயவைத்து எடுத்து அரைத்து கொள்ளவும். கொரகொரப்பாக அரைக்க வேண்டும். பின்னர் இதில் நாட்டுச்சர்க்கரை, வெல்லம், நெய், ஏலக்காய்த்தூள் கலந்து புட்டு மாதிரி சாப்பிடலாம். அல்லது இதை ஆவியில் வேகவைத்தும் சாப்பிடலாம்.
அரிசியை வைத்து இந்த மாதிரியான ஸ்நாக்ஸை எப்போதாவது பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள். சுவையாகவும் இருக்கும் விளையாடும் பிள்ளைகளுக்கு பசியும் கட்டும்.