தாளிக்க – கடலை எண்ணெய், காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்
செய்முறை:
முதலில் அவல் எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு 1-2 மணி நேரம் ஊறவைத்து பிழிந்து எடுத்துக்கொள்ளவும். இப்படி எடுக்கும்போது அவல் சாதம் போன்று உதிரி உதிரியாக இருக்கும்.
அதன்பிறகு, அந்த அவலில் தயிர் சேர்த்து நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து கிளரவும். அதன்பிறகு இதில் மோர் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, அவல் தயிர் சேர்த்த கலவையில் கொட்ட வேண்டும். இறுதியாக துருவிய மாங்காய் வெள்ளரிக்காய், சேர்த்தால், சுவையான அவல் தயிர் சாதம் ரெடி. சிறிது நேரம் கழித்து இதில் ஃபுல் க்ரீம் மில்க் சேர்க்கவும்.
மாங்காய் பச்சடி: முதலில், எண்ணெயில் வறுத்த வரமிளகாய் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, அதே எண்ணெயில், தோல் உரிக்காத பூண்டு, துருவிய மாங்காய் சேர்த்து வறுத்து வைத்த வரமிளகாயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். இறுதியாக கடலை எண்ணெய், காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்தால், சுவையான மாங்காய் பச்சடி ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.