/indian-express-tamil/media/media_files/UeTJCl40us9Mj9kNuQA1.jpg)
மருத்துவ, சிகிச்சை மற்றும் சமையல் பயன்களுக்காக நீண்ட காலமாகப் போற்றப்படும் இஞ்சி, பல மருத்துவ பண்புகளைக் கொண்டது. ஆயுர்வேதத்தில் அங்கீகரிக்கப்பட்ட மசாலாப் பொருளான மஞ்சளுடன் இஞ்சி சேரும்போது, ஒரு சூப்பர்ஃபுட் கலவையாக மாறி, ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இந்த இரண்டு மசாலாப் பொருட்களையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதற்கு எளிய வழியை சத்குரு கூறியுள்ளார்.
அவருடைய ஈஷா அறக்கட்டளையின் வலைப்பதிவில், வெளியிட்டுள்ள பதிவில், மற்ற தாவரங்களைப் போலவே, இஞ்சியும் பல நூறு அறியப்பட்ட கூறுகளை உள்ளடக்கிய ஒரு மிகவும் சிக்கலான சேர்மங்களின் கலவையாகும். இதில் பீட்டா-கரோட்டின், காப்சைசின், காஃபிக் அமிலம் மற்றும் குர்குமின் ஆகியவை அதிகம் உள்ளது. இஞ்சியின் காரத்தன்மை முக்கிய சேர்மங்களான ஜிஞ்சரால், ஷோகாலால் மற்றும் ஜிங்கரோன் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது.
மேலும், இஞ்சியில் உள்ள சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவையான ஜிஞ்சரால் தான் மூட்டு மற்றும் தசை வலியைப் போக்க உதவுகிறது என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இஞ்சி-மஞ்சள் டீ எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 5 கப்
1 எலுமிச்சையின் மஞ்சள் தோல் (காய்கறி தோல் சீவும் கருவியைப் பயன்படுத்தவும்)
2 அங்குல நீள இஞ்சித் துண்டு - தோலுடன் மெல்லிய வட்டங்களாக நறுக்கியது
2 அங்குல நீள மஞ்சள் கிழங்குத் துண்டு - தோலுடன் மெல்லிய வட்டங்களாக நறுக்கியது அல்லது துருவியது
கருப்பு மிளகு (Black pepper) - 1 நொறுக்கல்
1 எலுமிச்சையின் சாறு
1 தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய், வெண்ணெய் அல்லது அவகேடோ எண்ணெய்
1 தேக்கரண்டி தேன் (முடிந்தால் பச்சைத் தேன்)
செய்முறை:
தண்ணீர், எலுமிச்சை தோல், இஞ்சி, மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை அடுப்பில் வைத்து, மிதமாகக் கொதிக்க வைக்கவும். வெப்பத்தை குறைத்து, 7 நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு, தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும். டீயை ஒரு கப்பில் வடிகட்டி, 1 தேக்கரண்டி தேனைச் சேர்க்கவும். பச்சைத் தேன் பயன்படுத்துபவர்கள், அதன் சத்துக்கள் வெப்பத்தால் அழியாமல் இருக்க, டீ சில நிமிடங்கள் குளிர்ந்த பிறகு சேர்க்கலாம். அவ்வளவுதான் சுவையான இஞ்சி டீ ரெடி.
நன்மைகள்:
இஞ்சி மற்றும் மஞ்சள் இரண்டிலும் குர்குமின் மற்றும் ஜிஞ்சரால் போன்ற சேர்மங்கள் உள்ளன. இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தவை. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுகளை இயற்கையாக எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.
நிபுணர்களின் கூற்றுப்படி, மஞ்சள் மற்றும் இஞ்சி இரண்டும் அவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக அறியப்படுகின்றன. இவை மூட்டு வலி, தசை வலி, மற்றும் மாதவிடாய் அசௌகரியம் ஆகியவற்றைப் போக்க உதவும்.
இஞ்சி ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மஞ்சள் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து வீக்கத்தைக் குறைக்க, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், 2000 மி.கி இஞ்சியைத் தினமும் உட்கொள்வது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) மற்றும் அழற்சி குடல் நோய் (IBD) உள்ள நோயாளிகளின் செரிமானப் பாதையில் ஏற்படும் அழற்சி, அஜீரணம், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் புண்களைக் குறைப்பதில் நன்மை பயக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த டீ அளிக்கும் நறுமணம் மனநிலையைச் சமநிலைப்படுத்த உதவும் இயற்கையான சேர்மங்கள் காரணமாக, மன அழுத்தத்தைக் குறைத்து ஓய்வை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us