/indian-express-tamil/media/media_files/2025/11/01/pannirn-2025-11-01-16-36-24.jpg)
பனீர் டிக்கா மசாலா ஒரு சிறப்பான, கிரீமியான மற்றும் சுவை நிரம்பிய உணவு. இந்த உணவு உங்கள் மதிய லஞ்ச் பாக்ஸ்க்கு சரியான தேர்வாகும். கடைசிக் கடி வரை ஒவ்வொரு கடியும் அப்படியே சுவையாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
பன்னீர்
தயிர்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா
சீரகத்தூள்,
இஞ்சி பூண்டு பேஸ்ட்
லெமன் ஜூஸ்
உப்பு
குடைமிளகாய்
காய்ந்த வெந்தய கீரை
தக்காளி
வெங்காயம்
மஞ்சள் தூள் மிளகாய் தூள்
திக்கான பால்
கொத்தமல்லி
செய்முறை:
முதலில் தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், லெமன்ஜூஸ் உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
அடுத்து பன்னீரை நன்றாக கட் செய்து, மலாசாவில் சேர்த்து கூடவே கட் செய்த குடைமிளகாய் சேர்த்து கலக்கவும். இதனை ஒரு பானில் வைத்து ஸ்மோக் செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக காய்ந்த வெந்தய கீரையை சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்மோக் செய்த பன்னீர் கலவையை ஒரு பானில் சேர்த்து 3 நிமிடங்கள் ரோஸ்ட் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பானில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், அரைத்த தக்காளி சேர்த்து கூடவே மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியாக பன்னீர் மலாசாவை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக விடவும். கடைசியாக திக்கான பால், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான பன்னீர் டிக்கா மசாலா ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us