தீபாவளிக்கு பலகாரம் சுட்ட எண்ணெய் இன்னும் மீதம் இருக்கா? திரும்ப யூஸ் பண்ண ஈஸி டிப்ஸ்!

பலகாரம் செய்யும்போது பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை கூட வரும். இதனால் இவ்வளவு எண்ணெய் வேஸ்டாக போகிறதே என்று வருத்தம் இருக்கும்.

பலகாரம் செய்யும்போது பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை கூட வரும். இதனால் இவ்வளவு எண்ணெய் வேஸ்டாக போகிறதே என்று வருத்தம் இருக்கும்.

author-image
D. Elayaraja
New Update
deep-fry-dough-donuts-closeup-take-out-ready-bagels-with-slotted-spoon-from-pan-full-hot-oil-fried-baking-products_251474-5440

பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வீட்டில் பலகாரம் செய்வது வழக்கம். இப்படி பலகாரம் செய்யும்போது பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை கூட வரும். இதனால் இவ்வளவு எண்ணெய் வேஸ்டாக போகிறதே என்று வருத்தம் இருக்கும். ஆனால் இப்படி பலகாம் செய்த எண்ணெய் திரும்பவும் பயன்படுத்தி ஒரு வழி இருக்கிறது.

Advertisment

ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த கூடாது என்று சொல்வார்கள். அப்படி மீண்டும் பயன்படுத்த வேண்டிய நிலை வந்தால், அதன் வாசனையை முதலில் பார்க்க வேண்டும். அதில் எரிந்த, தீய்ந்த, அல்லது புளித்த வாசனை இருந்தால், அந்த எண்ணெய் கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தம். இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  தவறுதலாக இதை மீண்டும் பயன்படுத்தும்போது இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவக்கும்.

அதே சமயம், சுத்தமான கெட்ட வாசனை இல்லாத எண்ணெய்யை பரோட்டாக்கள், காய்கறிகள் பொறியல் செய்வதற்கு பயன்படுத்தலாம். ஆனால் 2 முறைக்கு மேல் எண்ணெய் பயன்படுத்துவது உடலுக்கு தீங்கானது. எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது அதில், இருக்கும் டிரான்ஸ் கொழுப்பு அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும். அதேபோல் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை டீப் ப்ரை செய்ய பயன்படுத்தவே கூடாது. 
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை. முறுக்கு, பூரி என எந்த உணவு செய்தாலும் அந்த எண்ணெயை முதலில் குளிர்வித்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

குறுக்கு, பூரி போன்ற உணவுகளின் துகள்கள் அதில் இருந்தால் மீண்டும் எண்ணெய் சூடாக்கும்போது அது உடலுக்கு ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும். ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயும் பிளாஸ்டிக்கும் சேர்வது பல எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதால், குளிர்ந்த எண்ணெயை காற்று புகாத பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டிலில் வைப்பது நல்லது. 

Advertisment
Advertisements
Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: