தீபாவளித் திருநாள் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தித்திப்புப் பண்டங்கள் தந்து உபசரித்து மகிழ்கின்றனர்.
Advertisment
இந்த தீபாவளிக்கு சுவையான முறுக்கு செய்து உங்கள் குடும்பத்தினரையும், வீட்டுக்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள்..
தேவையான பொருட்கள்
ரெடிமேட் முறுக்கு மாவு- அரை கிலோ
கருப்பு எள்ளு- 2 ஸ்பூம்
பெருங்காய தூள்- 1 சிட்டிகை
நெய், வெண்ணெய்- 1 ஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப
எப்படி செய்வது?
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒருவேளை உங்களுக்கு எள்ளு வேண்டாம் என்றால், நீங்கள் ஓமம் சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும்வரை பிசையவும். இப்போது முறுக்கு மாவு தயாராக உள்ளது.
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். முறுக்கு பிழியும் நாழி எடுத்து, அதில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவவும். இப்படி செய்தால் மாவு அதில் ஒட்டாது. இப்போது ஏற்கெனவே பிசைந்து வைத்த முறுக்கு மாவு எடுத்து நாழி நிறையும் வரை வைக்கவும்.
எண்ணெய் புகை வரும் அளவுக்கு காய வைக்க வேண்டாம். 80 சதவீதம் காய்ந்தாலே போதும். இப்போது ஒரு கரண்டியின் பின்பக்கம் லேசாக எண்ணெய் தடவி, அதில் முறுக்கு பிழியவும். அதை வீடியோவில் காட்டியபடி கரண்டியை சாய்த்து, மெதுவாக எண்ணெய்யில் போடவும். குமிழி அடங்கினால் முறுக்கு வெந்துவிட்டது என்று அர்த்தம். இப்போது எண்ணெய்யை இறுத்து முறுக்கை வெளியே எடுங்கள்.
இதேபோல எல்லா மாவிலும் முறுக்கு பிழிந்து எண்ணெய்யில் விட்டு எடுங்கள். சுவையான மொறுமொறு முறுக்கு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“