/indian-express-tamil/media/media_files/2025/09/23/idli-batter-2025-09-23-14-39-40.jpg)
இட்லி, தோசை மாவு புளித்து விடுவது பலரது வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை. குறிப்பாக கோடை காலத்தில் இந்தச் சிக்கல் அதிகமாக இருக்கும். மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்கவும், அதன் சுவை மாறாமல் இருக்கவும் சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்.
டிப்ஸ் 1: மாவு அரைக்கும்போது, அரிசி, உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக ஊறவைத்து அரைப்பது அவசியம். உளுந்து நன்கு பூப்போல் அரைபட்டு நுரைத்து வர வேண்டும். அரிசியை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். மாவை அரைக்கும்போது அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது. மாவு கெட்டியாக இருந்தால் புளிக்கும் செயல்பாடு மெதுவாக நடக்கும்.
டிப்ஸ் 2: மாவு அரைத்ததும், அதை உடனடியாக காற்று புகாத டப்பாவில் அடைக்கக் கூடாது. அரைத்த மாவை அப்படியே எடுத்து ஒரு காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து, தேவைக்கு ஏற்ப பிரித்து ஃப்ரிட்ஜியில் வைக்கலாம். மேலும் வெயில் படும்படி வைக்க கூடாது. அவ்வப்போது தேவையான மாவை மட்டும் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
டிப்ஸ் 3: மாவு அரைத்த சில மணி நேரங்களிலேயே அதை ஃபிரிட்ஜில் வைப்பது மிக முக்கியம். மாவு நன்கு புளித்த பிறகு அதை ஃபிரிட்ஜில் வைத்தால், அதன் புளிப்புத்தன்மை மேலும் அதிகரிக்காது. எனவே, புளித்த மாவை சீக்கிரமாகவே குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துவிட வேண்டும்.
டிப்ஸ் 4: தேவையான அளவு மாவை மட்டும் எடுத்து வெளியே வைத்து, பயன்படுத்திய பிறகு மீண்டும் மீதியுள்ள மாவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட வேண்டும். முழு மாவையும் வெளியே எடுத்து சூடாக்குவதைத் தவிர்க்கவும். மாவை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதை சிறிய அளவுகளாகப் பிரித்து எடுத்து வைப்பது நல்லது. மேலும் தேவையான மாவை மட்டும் எடுத்து கலந்து பயன்படுத்தலாம். மீதமுள்ள மாவை அப்படியே எடுத்து கலக்காமல் வைக்க வேண்டும்.
டிப்ஸ் 5: மாவுஅரைத்தப்பின்அதைஅப்படியேகலக்காமல்பாத்திரத்தில்போட்டுவைக்கலாம். பழையமாவுடன்புதியமாவைசேர்க்காமல்பயன்படுத்தவேண்டும். அப்படிசேர்த்தால்சீக்கிரம்கெட்டுவிடும். மேலும் சுத்தமான பாத்திரத்தைதான் பயன்படுத்த வேண்டும். அசுத்தமான பாத்திரத்தில் மாவை வைத்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விரைவில் கெட்டுவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.