குருமா செய்ய வேண்டும் என்றால் காய்கறிகள் அறுக்க வேண்டும் என்ற சிரமம் அனைவருக்கும் இருக்கும். அதனாலையே குருமா செய்வதில் சிரமம் ஏற்படும் சில நேரங்களில் நன்றாகவும் இருக்காது. ஆனால் வெறும் தக்காளியை மட்டும் வைத்து கோயம்புத்தூர் ஸ்டைலில் தக்காளி குருமா எப்படி செய்வது என்று ஸ்பைசி சமையல் யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம்
Advertisment
தேவையான பொருட்கள்
கடல் பாசி பட்டை கிராம்பு ஏலக்காய் கசகசா சோம்பு மிளகு பொட்டுக்கடலை தேங்காய் முந்திரி எண்ணெய் பிரிஞ்சி இலை வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு தக்காளி கொத்தமல்லி இலை
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு மிக்ஸி ஜாரில் கடல் பாசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, சோம்பு, மிளகு, பொட்டுக்கடலை, தேங்காய், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.
மசாலா பச்சை வாசனை நீங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் நல்ல பழுத்த தக்காளியை சேர்த்து கொதிவிட்டு இறக்கும்போது கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கினால் சுவையாக இருக்கும். இதை இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிடலாம்.