இந்நிலையில் உங்களுக்கு தெரியாமல் இந்த 5 வெள்ளை விஷயங்களை சாப்பிட்டுக்கொண்டு இருப்பீர்கள். இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு பயன்படுத்தி பிஸ்கட், பிரட், பால் வரை செய்யப்படுகிறது . மேலும் வெள்ளை அரிசியைத்தான் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் போது, இவை நமது ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. குறிப்பாக கேக், பேக்கரி பொருட்கள், குளிர் பானங்களை நாம் சாப்பிடும்போது, அது ரத்த சர்க்க்ரையை அதிகரிக்கும்.
இதுபோல உப்பை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ரத்த அழுத்தம் அதிகமாகும், இதய ரத்த கூழாய்களை பாதிக்கும் நோய்களும் அதிகமாகும். பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளில் உப்பு அதிகமாக இருக்கும். அதுபோல இனிப்பும்தான்.
இந்நிலையில் சுத்திரகரிக்கப்பட்ட மாவால் செய்யப்படும் பொருட்களில் கிளைசிமிக் இண்டக்ஸ் அதிகம். இது மேலும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதுபோல பதப்படுத்தப்பட்ட பாலில்கூட , சர்க்கரை இருக்கலாம். இந்நிலையில் இது ஜீரண பிரச்சனையை உருவாக்கலாம்.
இந்நிலையில் இதையெல்லாம் நாம் கைவிட வேண்டும் என்பதில்லை. சர்க்கரை, மாவு, உப்பு, சாதம் மற்றும் பால் ஆகியவை நாம் எடுத்துக்கொண்டாக வேண்டும். ஆனால் அளவு அதிகமானால் டைப் 2 சர்க்கரை நோய், உடல் எடை அதிகரிப்பு, இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும்.
இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட மாவிற்கு பதிலாக சிறுதானிய மாவை பயன்படுத்த வேண்டும். காய்கறி சாலட், முளைகட்டிய பயிர்கள், மோர், தயிர் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில் இருவேளை உணவுகளுக்கு இடையே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக உப்பு அல்லது சர்க்கரை அதிகம் இருக்கும் ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இதற்கு பதிலாக நட்ஸ், பழங்கள், பேரிச்சம்பழம் ஆகியவற்றை நாம் எடுத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் அதிக நேரம் பசியோடு இருக்க வேண்டாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு இயற்கையாக கிடைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.