வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ.50,000-க்கும் மேல் பணவரித்தனை செய்ய வேண்டுமானால் ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் கணக்கு உள்ளவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைக்கத் தவறினால் அந்த கணக்கு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.