செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் கன்னத்தில் பளார் என அடிக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவின் விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது நந்தியால் தொகுதி. இந்த தொகுதியில ஆகஸ்ட் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாவு நாயுடு புதன் கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அங்கு தெலுங்கு தேச கட்சிக்கும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இருக்கும் பலப்பரிச்சையாக இருந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகரும், ஹிந்துபூர் தொகுதியின் தெலுங்குதேச கட்சியின் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணா, இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நந்தியால் தொகுதிக்கு புதன்கிழமை இரவு சென்றிருந்தார்.
அப்போது, ரசிகர்கள் கூட்டம் முன்டியடித்துக் கொண்டு அவரை பார்க்க முயன்றனர். இதனிடையே, பாலகிருஷ்ணாவுடன் செல்ஃபி எடுக்க ரசிகர் ஒருவர் முயன்றதாக தெரிகிறது. அப்போது, கோபத்தில் பொங்கிஎழுந்த பாலகிருஷ்ணா, அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என அடித்துவிட்டார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலடித்து வருகிறது.
????????♂️Something don't change. I m not sure who's mistake but he shouldn't have man handled. pic.twitter.com/mTlaVChk22
— Agasthya K (@agasthyakantu) August 17, 2017
பாலகிருஷ்ணா சர்ச்சையில் சிக்குவது இது ஒன்றும் புதிதல்ல. இதேபோல கடந்த ஆண்டு, பாலகிருஷ்ணா, செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை தள்ளிவிட்டார் என்பது நினைவிலிருக்கலாம். முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் திரைப்படம் ஒன்றின் ஆடியோ வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.