Advertisment

பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு: மருத்துவமனையில் அனுமதி

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bhim Army chief Chandrashekhar Azad shot at in Saharanpur

துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்.

பீம் ஆர்மி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத், உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் ஆயுதம் ஏந்திய நபர்களால் இன்று சுடப்பட்டார்.

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இடுப்பில் சுடப்பட்ட ஆசாத், தியோபந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடிவிட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ANI இடம் பேசிய காயமடைந்த ஆசாத், தாக்கப்பட்டபோது காருக்குள் தனது இளைய சகோதரர் உட்பட ஐந்து பேர் இருந்ததாகக் கூறினார்.

“எனக்கு நன்றாக நினைவில் இல்லை, ஆனால் எனது மக்கள் அவர்களை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்களின் கார் சஹரன்பூர் நோக்கி சென்றது. யு-டர்ன் எடுத்தோம். சம்பவம் நடந்தபோது எனது தம்பி உட்பட நாங்கள் 5 பேர் காரில் இருந்தோம்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment