/tamil-ie/media/media_files/uploads/2017/10/selfie.png)
டெல்லியில் ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த 18 வயது இளைஞர், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
வடக்கு டெல்லியை சேர்ந்த அர்பாஸ் (வயது 18) அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பள்ளி முடித்துவிட்டு டியூஷனுக்கு சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அர்பாஸ் வீடு திரும்பாத நிலையில், அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது சடலத்தைக் கண்ட பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அர்பாஸின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்த இளைஞர் கடைசியாக ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்ததாக அங்கிருந்தவர்கல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அர்பாஸ், ஹெட்ஃபோன் பொருத்தியிருந்து அதிக சத்தத்தின் காரணமாக, அவருக்கு ரயில் வருவது தெரியாமல் இருந்திருக்கலாம் எனவும், அதனால், ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.