Advertisment

3 மாதங்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து!

ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
3 மாதங்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து!

ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும் குடும்பங்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் நேற்று(29.6.18) மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைப்பெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான், "பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்கிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய முடியும்” என்றும் கூறினார்.

இதன்மூலமாக நாட்டில்ஏழைகளுக்கு உணவில்லா நிலையை தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் பாஸ்வான், ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment