Advertisment

நாளை வெளியாகிறது சிபிஎஸ்இ +2 ரிசல்ட்!

இந்த ஆண்டும் மாணவர்களுக்கு வழக்கம் போல கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாளை வெளியாகிறது சிபிஎஸ்இ +2 ரிசல்ட்!

பிளஸ்-2 பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் வழக்கமான முறையை ரத்துசெய்வதாக சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்தது. இந்த குழப்பத்தால், சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், கருணை மதிப்பெண் முறையை ரத்து செய்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு, சிபிஎஸ்இ-யின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தத் திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனத் தெரிவித்தது. இதனால், இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, சமீபத்தில் பேட்டியளித்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது. இதனால், மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. விரைவில், தேர்வு முடிவு வெளியாகும் தேதியை சிபிஎஸ்இ அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில், இதுதொடர்பான வழக்கில், 'தேர்வில் கேட்கப்படும் கடினமான வினாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கருணை மதிப்பெண்களை ரத்து செய்வது நியாயமற்ற செயல். இந்த ஆண்டும் மாணவர்களுக்கு வழக்கம் போல கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்' என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ தனது அறிக்கையில், 'சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி வெளியிடப்படுகின்றன. cbse.nic.in என்ற இணையதளத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்' என்று குறிப்பிட்டுள்ளது.

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment