Advertisment

நேரு குடும்பம் காந்தி பெயரை சூட்டிக் கொள்வது ஏன்? மோடிக்கு காங்., உரிமை மீறல் நோட்டீஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.

author-image
Jayakrishnan R
New Update
Congress hits back Breach of privilege notice against PM Modi over comments on Rahul Sonia

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது எடுத்த படம்.

இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்த விமர்சனக் கருத்துக்களுக்காக ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான வழிகளை பாஜக ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக "இழிவான, அவமதிக்கும், கேவலமான மற்றும் அவதூறான" கருத்துக்களை தெரிவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Advertisment

ராகுலுக்கு எதிரான பாஜக தாக்குதலை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த நடவடிக்கையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) தொடங்கினார்.

தொடர்ந்து, கே.சி. வேணுகோபால், ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கரை அணுகி, மாநிலங்களவையின் நடைமுறை மற்றும் நடத்தை விதி 188ன் கீழ் பிரதமருக்கு எதிரான சிறப்புரிமை குறித்த நோட்டீஸ்-ஐ வழங்கினார்.

வேணுகோபால், தன்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடியின் கருத்து "அபத்தமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நேரு" குடும்பப் பெயரைப் பயன்படுத்தாத "குடும்பம்" குறித்து பிப்ரவரியில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் பதில் அளித்துள்ளார்.

அதில், பிரதமரின் கருத்துகள், “நேரு குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல், சபையையும் அவமதிப்பது ஆகும். மேலும், அவதூறும் கூட” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அவதூறான, அவமதிக்கும், அருவருப்பான மற்றும் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக, அவர்களின் சிறப்புரிமைகளை மீறியதற்காகவும், சபையை அவமதித்ததற்காகவும், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எதிராக சிறப்புரிமை நடவடிக்கைகளை நான் கோருகிறேன்,” என்று வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 9 அன்று மோடி தனது உரையில், “(ஜவஹர்லால்) நேரு ஜியின் பெயரைக் குறிப்பிடுவதைத் தவறவிடுவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

அவர் நாட்டின் முதல் பிரதமராக இருந்தார். ஆனால் அவர்களில் யாரும் நேரு குடும்பப்பெயரை ஏன் பயன்படுத்தவில்லை என்பது எனக்குப் புரியவில்லை? நேரு குடும்பப் பெயரைப் பயன்படுத்துவதில் என்ன அவமானம்? இவ்வளவு பெரிய ஆளுமை உங்களாலும், குடும்பத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதா?” எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் வேணுகோபால், “தந்தையின் பெயரை அவர்கள் பின்தொடர்கின்றனர். இதில் என்ன தவறு. இதில் இந்தியாவில் நடைமுறையில் இருப்பதுதான்.

ஆனால் இதையும் மீறி அவர் (பிரதமர்) வேண்டுமென்றே கேலி செய்தார். கருத்தின் தொனியும் நிலையும் இயல்பில் உள்ளுணர்வு மற்றும் இழிவுபடுத்துவதாக உள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.

பிரதமரின் லோக்சபா உரைக்கு சில நாட்களுக்குப் பிறகு, வயநாட்டில் நடந்த பேரணியில், ராகுல், தனது குடும்பப் பெயரைக் குறிப்பிட்டு அவரை "நேரடியாக அவமதித்ததாக" குற்றம் சாட்டினார்.

அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடி குறித்து அவர் தெரிவித்த சில கருத்துக்களை பதிவேடுகளில் இருந்து நீக்கிய சபாநாயகரின் நடவடிக்கைக்கு மாறாக, லோக்சபாவின் பதிவுகளில் இருந்து பிரதமரின் கருத்துக்களை நீக்காத முடிவையும் காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது ராகுல், “பிரதமரிடம் சில கேள்விகள் கேட்டேன். திரு அதானி உடனான உறவைப் பற்றி அவரிடம் கேட்டேன். அதானி எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தார் என்று கேட்டேன்.

ஒரு கேள்விக்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை. நீங்கள் ஏன் நேரு என்று அழைக்கப்படுவதில்லை, ஏன் காந்தி என்று அழைக்கப்படுகிறீர்கள் என்று எனது கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ஒருவேளை திரு மோடிக்கு இது புரியாமல் இருக்கலாம். ஆனால் பொதுவாக இந்தியாவில் எங்கள் குடும்பப் பெயர் எங்கள் தந்தையின் குடும்பப் பெயர்தான்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Congress Vs Bjp Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment