Coronavirus Live Updates : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்,51 மரணங்கள் மற்றும் 905 புது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டியுள்ளது. இதில் 8,988 பேர் சிகிச்சையில் உள்ளனர், 1,035 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், 339 மரணமடைந்துள்ளனர்
மேலும் படிக்க : கொரோனாவால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்
மார்ச்.24ம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய பொது முடக்கம் இன்றோடு முடிவடையும் நிலையில், ரயில்வே சேவைகளைத் தொடங்குவதற்கான எந்தவித இசைவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. கடந்த வாரத்தில், பல மாநிலங்கள் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக, இந்த மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.
எதார்த்த சூழலை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 15 முதல் திட்டமிடப்பட்ட அனைத்து ரயில் சேவைகளையும் ரத்து செய்வதற்கான் ஆவணங்களை ரயில்வே வாரியம் தயார் செய்து வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான மேலும் சில முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
மேலும் படிக்க : மிரட்டும் கொரோனா… மிரண்டு போன வல்லரசுகள்… அசராமல் நிற்கும் பெண் தலைமைகள்!
Live Blog
Coronavirus News Live Updates: கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.
தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் 16.4.2020 அன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் கொரோனா நோய்த் தொற்று குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடனும் - ஏன், மருத்துவ நிபுணர்களுடனும், மதத் தலைவர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் கொடிய கொரோனா நோய் குறித்து 15.4.2020 அன்று நடைபெறும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து , திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும்; 16.4.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் அன்று அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் நாளை கூட்டணி கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ்
* கட்சி தலைவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்த போலீசார் தடை
* காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்தலாம் என தேனாம்பேட்டை போலீசார் அறிவுறுத்தல்
பாந்த்ரா போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு
பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம் , தடியடி கவலை அளிக்கிறது
இதுபோன்ற நிகழ்வுகள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் - அமித்ஷா
பத்து வினாடிக்கு மூச்சை இழுத்து பிடிக்க முடிந்தால் #COVID19 இல்லை என்பதற்கு எந்த சாட்சியும் கிடையாது. எனவே பொய்யான தகவலை நம்ப வேண்டாம்.
பத்து வினாடிக்கு மூச்சை இழுத்து பிடிக்க முடிந்தால் #COVID19 இல்லை என்பதற்கு எந்த சாட்சியும் கிடையாது. எனவே பொய்யான தகவலை நம்ப வேண்டாம்.#Corona #COVID19 @MoHFW_INDIA @PIB_India @DG_PIB @PMOIndia @airnews_Chennai @DDNewsChennai pic.twitter.com/sl2IXKCC9v
— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) April 14, 2020
ஒவ்வொரு காவலரும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை நிறைவேற்றிட வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது - டிஜிபி திரிபாதி
உங்களது மோசமான நாட்களை, சிறந்த நாட்களாக மாற்ற கடுமையாக செயல்பட்டாக வேண்டும் - டிஜிபி
வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 28711. அரசுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் -135
28 நாட்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் - 68519
இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 19255
இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை -15502
- பீலா ராஜேஷ்
கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
எந்த நாட்டில் வசிக்கிறீர்களோ அந்நாட்டின் விதிமுறைகளை பின்பற்றுங்கள். உங்கள் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர், உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்வதே அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் புத்தாண்டு பரிசு.
- ரஜினிகாந்த்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றும் கொரோனாவால் புதிதாக 1,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 117 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியா பரிசோதனைக் கருவிகளை வாங்குவதில் தாமதமாக்குவது இப்போது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு வெறும் 149 சோதனைகள் செய்யப்படுகிறது. லாவோஸ் நைஜர் மற்றும் ஹோண்டுராஸ் நாடுகளைக் காட்டிலும் குறைவாக பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளோம். கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு அதிக அளவில் பரிசோதனை செய்வது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பணிகளுக்கு தடையில்லை என்ற வகையில், தமிழகத்தில் நாட்டுப் படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகள் மூலம் தொடர்ந்து மீன் பிடிக்கலாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர்
நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி வழங்கிய 7 அறிவுரைகள் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல; நிவாரண உதவிகள் - பொருள் உதவிகள்! மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் நிதி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பிறகு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 179வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.
இந்திய கப்பற்படை தெற்கு கமாண்ட், கொச்சியில் கொரோனா வைரஸ் நோயாளிகளை, மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் வகையில் air evacuation pod ஒன்றை தயாரித்து உள்ளனர்.
#WATCH Indian Navy’s Southern Command,Kochi has developed an air evacuation pod to airlift any COVID19 patient from a warship or any other place while minimising the threat of spread of infection. It was developed locally on available stretchers&can be used by other agencies also pic.twitter.com/U9juZZ3aDb
— ANI (@ANI) April 14, 2020
அரசிடம் பணம் உள்ளது. உணவும் உள்ளது. ஆனால் மக்களுக்கு தர தயாராக இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர்களின் நிதி கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் இல்ல்லை. ரகுராம் ராஜன்,. ஜீண்ட்ரெஸி, பிரபாத் பட்நாயக், அபிஜித் பானர்ஜி போன்றோரின் அறிவுரைகள் காதுகேளதவர்களின் காதில் விழுந்தகதையாய் உள்ளது என்றும் ட்வீட் செய்துள்ளார்.
The poor have been left to fend for themselves for 21+19 days, including practically soliciting food. There is money, there is food, but the government will not release either money or food.
Cry, my beloved country.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 14, 2020
ஊரடங்கில் சில தளர்வுகள் குறித்து நாளை முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த ஜனவரி அன்று ஒரே ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 220-க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டியுள்ளது. இதில் 8,988 பேர் சிகிச்சையில் உள்ளனர், 1,035 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், 339 மரணமடைந்துள்ளனர். கோவிட்- 19 தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
கொவிட்-19 க்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருத்துவ சரக்குகளைக் கொண்டு செல்ல 218க்கும் மேற்பட்ட லைஃப்லைன் உதான் விமானங்கள் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையினால் (MoCA) இயக்கப்பட்டுள்ளன.உயிர் காக்கும் உதான் விமானங்கள் இன்று வரை 2,05,709 கி.மீ தூரம் பயணித்திருப்பதுடன், சுமார் 377.50 டன் சரக்குகளையும் கொண்டு சென்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights