இன்று மாலை 3.37 மணி அளவில் ஹரியானா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 பதிவாகியிருக்கும் இந்த நில நடுக்கத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை ANI செய்தி நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
கடந்த மே மாத தொடக்கத்தில், ஆப்கான் பகுதியில் 6.2 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வுகள் பாகிஸ்தானிலும் வட இந்தியாவிலும் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மட்டுமல்லாமல் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கின்றது.
ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தகவல் அளித்திருக்கின்றார்கள்.