ஐம்மு-காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4,7-ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் காரணமாக, அங்குள்ள வீடுகள் அதிர்ந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மேலும், உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் இல்லை என்று தகவல் தெரிவிக்கின்றன.