இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: 2 மாநிலங்களில் வாக்குரிமை பெற்றுள்ள பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்

மேற்கு வங்க வாக்காளர் அட்டையை ரத்து செய்யக் கோரி பிரஷாந்த் கிஷோர் விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து அவர் விளக்கவில்லை என்றும் கூறினார்.

மேற்கு வங்க வாக்காளர் அட்டையை ரத்து செய்யக் கோரி பிரஷாந்த் கிஷோர் விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து அவர் விளக்கவில்லை என்றும் கூறினார்.

author-image
D. Elayaraja
New Update
Prashant Kishore

தேர்தல் வியூக நிபுணரும், அரசியல்வாதியுமான பிரஷாந்த் கிஷோர் பெயர் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் என இரண்டு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, பீகாரின் கர்கஹர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரி அவருக்கு மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

சாஸாராம் நில வருவாய் துணை ஆட்சியர் மற்றும் கர்கஹர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலரால் கையொப்பமிடப்பட்ட அந்த நோட்டீஸில், "தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கொல்கத்தா-பாட்னா பதிப்பில் வெளியான செய்தியின்படி, உங்கள் பெயர் பீகார் வாக்காளர் பட்டியலிலும், மேற்கு வங்க வாக்காளர் பட்டியலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, பிரிவு 17-இன் படி, எந்தவொரு நபரும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவு செய்யப்படக் கூடாது. இதை மீறுபவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, பிரிவு 31-இன் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து நீங்கள் மூன்று நாட்களுக்குள் உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிரஷாந்த் கிஷோரின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் குறித்து பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கை கேட்டதாகவும், அதை வழங்கியதாகவும் மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் வெளியிட்ட செய்தியின்படி, மேற்கு வங்கத்தில், அவரது முகவரி, பபானிபூர் (முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சட்டமன்றத் தொகுதி) உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள 121 காளிகாட் சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அவர் திரிணமூல் காங்கிரஸுக்கு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார். அவரது வாக்குச்சாவடி பி. ராணிசங்கரி லேன்-இல் உள்ள செயின்ட் ஹெலன் பள்ளி என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

பீகாரில், அவர் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான கோனார் அருகே, கர்கஹர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஸாராம் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். அவரது வாக்குச்சாவடி மத்ய வித்யாலயா, கோனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரஷாந்த் கிஷோரிடம் கருத்து கேட்க அழைப்புகளும் செய்திகளும் அனுப்பப்பட்டபோது அவர் பதிலளிக்கவில்லை. இருப்பினும், அவரது அணியைச் சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம், மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகே அவர் பீகாரில் வாக்காளரானார் என்று தெரிவித்தார். மேலும், மேற்கு வங்க வாக்காளர் அட்டையை ரத்து செய்யக் கோரி பிரஷாந்த் கிஷோர் விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து அவர் விளக்கவில்லை என்றும் கூறினார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, பிரிவு 17-இன் படி, "எந்தவொரு நபரும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படுவதற்கு உரிமை இல்லை". மேலும், பிரிவு 18, ஒரே தொகுதியின் வாக்காளர் பட்டியலில் ஒரு நபர் ஒருமுறைக்கு மேல் பதிவு செய்யப்படக் கூடாது என்று கூறுகிறது. பதிவு செய்தபின், ஒரு வாக்காளர் தங்கள் வசிப்பிடத்தை மாற்றுவதற்காக அல்லது பிழைகளை திருத்துவதற்காக படிவம் 8 (Form 8)-ஐ பூர்த்தி செய்து தங்கள் பதிவை மாற்றிக் கொள்ளலாம். இருப்பினும், வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்வது என்பது அரிதான விஷயம் அல்ல. உண்மையில், நாடு முழுவதும், குறிப்பாக பீகாரில், வாக்காளர் பட்டியலைச் சிறப்புத் திருத்தம் (Special Intensive Revision - SIR) செய்ய முடிவெடுத்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளார். 

"சில வாக்காளர்கள் ஒரு இடத்தில் பதிவு செய்த பிறகு, தங்கள் பெயரை நீக்காமல் வேறு இடத்திற்குச் சென்று மீண்டும் பதிவு செய்கிறார்கள். இது வாக்காளர் பட்டியலில் மீண்டும் மீண்டும் உள்ளீடுகள் வருவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது," என்று தேர்தல் ஆணையம் ஜூன் 24 அன்று வாக்காளர் பட்டியலைச் சிறப்புத் திருத்தம் தொடர்பான உத்தரவில் தெரிவித்திருந்தது.
செப்டம்பர் 30 அன்று வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் முடிவடைந்த பீகார் வாக்காளர் பட்டியலைச் சிறப்புத் திருத்தம் நடவடிக்கையின்போது, சுமார் 68.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர், இவர்களில் 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருந்தவர்கள். இருப்பினும், அதிகாரிகள், போலிப் பதிவுகள் இன்னும் பட்டியலில் இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

Prashant Kishor India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: