Rahul Gandhi | மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இளைஞர்களுக்கான தனது ஆடுகளத்தைக் கூர்மைப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (மார்ச் 7) காங்கிரஸ் கட்சியின் ஐந்து வாக்குறுதிகளை அறிவித்தார்.
ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்ரா பேரணியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார்.
அப்போது பேசிய ராகுல், “30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாங்கள் கணக்கிட்டுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிஜேபி இதை நிரப்பவில்லை.
எனவே ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த 30 லட்சம் அரசு வேலைகளில் 90 சதவீதத்தை ஆட்சேர்ப்பு செய்வதே எங்களின் முதல் படி.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நாங்கள் கொண்டு வந்ததுபோல், தற்போது அனைத்து இளைஞர்களுக்கும் தொழிற்பயிற்சிக்கான உரிமையை வழங்க உள்ளோம்.
ஒவ்வொரு பட்டதாரி அல்லது டிப்ளமோதாரரும் இந்த உரிமைக்கு தகுதியுடையவர்கள். ஒரு வருட கால பயிற்சி பெறுவார்கள், அதற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
மூன்றாவதாக, வினாத்தாள் கசிவைத் தடுக்க கட்சி ஒரு சட்டத்தைக் கொண்டுவரும். அங்கு தேர்வுகளை நடத்துவதற்கான தரப்படுத்தப்பட்ட வடிவம் இருக்கும். இதன்படி, தனியார் நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் வழங்கப்படாது.
நான்காவதாக, கடந்த ஆண்டு ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு நிறைவேற்றிய கிக் தொழிலாளர்கள் சட்டம் தேசிய அளவில் அமல்படுத்தப்படும் என்றார். தொடர்ந்து, கட்சி குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டத்தை அமல்படுத்தும் என்று ராகுல் கூறினார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் லவியுறுத்தினார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Eye on youth, Rahul Gandhi reveals Congress’s 5 Lok Sabha promises – govt vacancies to start-ups to gig work
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“