Advertisment

மாணவன் ஜுனைத் கான் கொலை விவகாரம்; முக்கிய குற்றவாளி கைது!

சிறுவன் ஜுனைத் கானை கத்தியால் குத்திய நபர், மஹாராஷ்டிராவின் துலே பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாணவன் ஜுனைத் கான் கொலை விவகாரம்; முக்கிய குற்றவாளி கைது!

நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டுசெல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி, ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச்சென்ற இஸ்லாமியச் சிறுவர்கள், பசுக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

Advertisment

அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறுவன் ஜுனைத் கானை கத்தியால் குத்திய நபர், மஹாராஷ்டிராவின் துலே பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஃபரிதாபாத் காவலர் கூறுகையில், ஜூனைதை கத்தியால் குத்திய முக்கியமான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.

முன்னதாக, இந்த குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ரயில்வே போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment