டெல்லி மாநகராட்சி தேர்தலில் கடந்த காலங்களை காட்டிலும் ஆம் ஆத்மி கணிசமான இடங்களை பிடித்துள்ளது. அதேநேரத்தில் இம்முறை பாரதிய ஜனதா குறைவான இடங்களை பிடித்துள்ளது.
இன்று (டிச.7) பிற்பகல் 3 மணி நிலவரப்படி, முனிசிபல் தேர்தலில் ஆம் ஆத்மியின் வாக்குப் பங்கு 42% ஆக இருந்தது, இது 2017 எம்சிடி வாக்கெடுப்பு வாக்குப் பங்கான 26% அதிகமாக இருந்தது.
கடந்த தேர்தல்களில் 272 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே வென்ற ஆம் ஆத்மி கட்சியினர், இந்த ஆண்டு 250 இடங்களில் 134 இடங்களை வென்றுள்ளனர்.
இருப்பினும், 2017 இல் 272 வார்டுகளில் 181 ஆக இருந்த பாஜகவின் எண்ணிக்கை 250 வார்டுகளில் 104 ஆகக் குறைந்திருந்தாலும், அதன் வாக்கு சதவீதம் 2017 இல் 36% ஆக இருந்து இந்த ஆண்டு 39% ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மூன்று சிவில் அமைப்புகள் ஒரே எம்சிடியாக இணைக்கப்பட்டதால் மொத்த இடங்களின் எண்ணிக்கை 272ல் இருந்து 250 ஆக குறைந்துள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸின் வாக்குகள் 21% இலிருந்து 12% ஆக சரிந்தன, இது ஆம் ஆத்மி மற்றும் பிஜேபி இரண்டும் காங்கிரஸின் வாக்குப் பங்கின் ஒரு பகுதியை தங்களுக்குச் சாதகமாக மாற்றியதைக் குறிக்கிறது.
2022 மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மியின் வாக்குப் பங்கு 2020 மாநில சட்டமன்றத் தேர்தலில் அதன் வாக்குப் பங்கை விட கணிசமாகக் குறைவாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது 54% ஆக இருந்தது. மறுபுறம், முனிசிபல் தேர்தலில் பிஜேபியின் வாக்கு விகிதம் 2020 சட்டமன்றத் தேர்தலில் 41% வாக்குகளைப் பெற்றிருந்ததைப் போலவே உள்ளது.
மூன்று பெரிய கட்சிகளில், 2020 மற்றும் 2015 சட்டமன்றத் தேர்தல்களை விட (முறையே 12% மற்றும் 10%) நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் மட்டுமே சிறந்த வாக்குகளைப் பெற்றுள்ளது.
2020 தேர்தலில் ஒரு இடத்தில் கூட தேர்வாகாத காங்கிரஸிற்கு மக்கள் தொடர்ந்து வாக்களித்துவருகின்றனர் என்பதையும் இது காட்டுகிறது.
2019 மக்களவை தேர்தலிலும், டெல்லி சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன், ஆம் ஆத்மி கட்சி, 23% வாக்குகளை பெற்றது. காங்கிஸ் 18.2% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. அந்தத் தேர்தலில் பாஜகவின் ஆதிக்கம் அபாரமாக இருந்தது, டெல்லியில் 57% வாக்குகளை கட்சி பெற்றிருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/