How did Mahatma Gandhi commit suicide : மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று குஜராத் மாநில பள்ளிகளின் 9 வது வகுப்பு அக மதிப்பீட்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள சம்பவம் மாணவர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதிகளில் இயங்கி வரும் சுயநிதி பள்ளிகள் மற்றும் சில கல்வி நிறுவனங்கள் இணைந்து சுபலாம் ஷாகா விகாஸ் சங்குல் என்ற அமைப்பை நடத்தி வருகிறது. பள்ளி தேர்வு வினாத்தாள்கள் அனைத்தையும் இந்த அமைப்பே கட்டமைத்து வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பால் நடத்தப்படும் ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு அகமதிப்பீட்டு தேர்வில், மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்வியும், உங்கள் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்தால், அதுதொடர்பாக போலீசிடம் எவ்வாறு புகார் அளிப்பீர்கள்? ? , சட்டவிரோத செயல்புரிபவர்களால், எத்தகைய இன்னல்களை அனுபவிக்கிறீர்கள் என்பது குறித்த கேள்வியும் இடம்பெற்றுள்ளது.
கல்வித்துறை கைவிரிப்பு : இதுகுறித்து புகார் வந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள காந்திநகர் மாவட்ட கல்வி அலுவலர் பாரத் வதேர், இந்த கேள்வித்தாள் தயாரிப்பில், மாநில கல்வித்துறையும் பங்கில்லை என்று தெரிவித்துள்ளார்.