உச்சநீதிமன்றத்தை பரபரப்பாக்கிய சசிகலா சீராய்வு மனு : விசாரணை தள்ளிப்போன பின்னணி

உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜாமீன் பெற்றுக் கொடுத்தவர் பாலி நாரிமன். எனவே சசிகலாவின் சீராய்வு மனுவை பாலி நாரிமனின் மகனான நீதிபதி ரோஹின்டன் விசாரிக்க இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜாமீன் பெற்றுக் கொடுத்தவர் பாலி நாரிமன். எனவே சசிகலாவின் சீராய்வு மனுவை பாலி நாரிமனின் மகனான நீதிபதி ரோஹின்டன் விசாரிக்க இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
உச்சநீதிமன்றத்தை பரபரப்பாக்கிய சசிகலா சீராய்வு மனு : விசாரணை தள்ளிப்போன பின்னணி

சசிகலாவின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தையே ஏக பரபரப்பாக்கிவிட்டது. ‘டாம் மோஸ்ட்’ சீனியர் வழக்கறிஞர்களின் தலையீட்டால் அவரது சீராய்வு மனு தள்ளிப் போயிருப்பது தெரிய வந்திருக்கிறது.

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கிறார்கள். அண்மையில் சிறை அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதிகளை சசிகலா பெற்றதாக பெங்களூரு டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தச் சூழலில் சட்டரீதியாக தங்களுக்கு உள்ள கடைசி வாய்ப்பான சீராய்வு மனுவை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், ‘லஞ்ச வழக்குகளில் அரசு ஊழியரைத்தான் தண்டிக்க முடியும். இந்த வழக்கில் அரசு ஊழியரான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது. எனவே எங்களை தண்டிப்பது நியாயமல்ல. எங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும்’ என கேட்டிருந்தனர்.

publive-image முகுல் ரோத்தகி

Advertisment
Advertisements

நீதிமன்ற நடைமுறைப்படி, தண்டனை வழங்கிய நீதிபதிகளே சீராய்வு மனுவையும் விசாரிப்பார்கள். இதர வழக்குகளைப் போல திறந்த நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படுவதில்லை. நீதிபதிகளில் அறையில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மட்டுமே அமர்ந்து அந்த மனுவை ஆய்வு செய்வார்கள். இதில் வழக்கறிஞர்கள் வாதம் எதுவும் நடைபெறாது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரைப் பொறுத்தவரை இவர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திரகோஷ் ஓய்வு பெற்றுவிட்டார். எனவே தீர்ப்பளித்தவர்களில் மற்றொரு நீதிபதியான அமித்தவராயுடன், ரோஹின்டன் நாரிமன் இந்த சீராய்வு மனுவை ஆகஸ்ட் 2-ம் தேதி விசாரிக்க பட்டியல் இடப்பட்டது.

இவர்களில் நீதிபதி ரோஹின்டன் நாரிமன், கர்நாடகாவை சேர்ந்த மூத்த சட்ட நிபுணரான பாலி நாரிமனின் மகன் ஆவார். சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா உத்தரவு அடிப்படையில் ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது, அவருக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜாமீன் பெற்றுக் கொடுத்தவர் பாலி நாரிமன். எனவே சசிகலாவின் சீராய்வு மனுவை பாலி நாரிமனின் மகனான நீதிபதி ரோஹின்டன் விசாரிக்க இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

publive-image பிரசாந்த் பூஷன்

சொத்துக் குவிப்பு வழக்கை முன்னெடுத்த தி.மு.க.கூட இது தொடர்பாக டெல்லியில் எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை. ஆனால் பொதுநல வழக்குகளை நடத்துபவரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகஸ்ட் 1-ம் தேதியே இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ‘தந்தை ஆஜராகிய வழக்கில் மகன் நீதிபதியாக இருந்து தீர்ப்பு சொல்வது சரியல்ல’ என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல அண்மையில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகியவரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் அதே கருத்தை முன்வைத்து தலைமை நீதிபதி கேஹரிடம் முறையிட்டார். இதைத் தொடர்ந்து ரோஹின்டன் நாரிமன் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து ஒதுங்கினார். அமித்தவராயுடன் இணைந்து சசிகலாவின் சீராய்வு மனுவை விசாரிக்கும் நீதிபதியை உச்சநீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

இந்த விவகாரம் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகிறது. சசிகலா விவகாரத்தை அரசியலைக் கடந்து உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர்கள் பலருமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அது! ஊழல்வாதிகள் எந்த வகையிலும் தப்பிவிடக்கூடாது என அவர்கள் காட்டும் அக்கறையாகவே அதை எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.

V K Sasikala Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: