Advertisment

இமாச்சல் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸில் முதல்வர் ரேஸில் முன்னாள் முதல்வர் வீரபத்ரா மனைவிக்கு வாய்ப்பு

சமீபத்தில், பிரதிபா விக்ரமாதித்யாவுடன் பாரத் ஜோடோ யாத்ராவில், மத்தியப் பிரதேசத்தில் கலந்து கொண்டார். மேலும், ராகுல் காந்திக்கு பாரம்பரிய இமாச்சலி தொப்பியை பரிசளித்தார். பிரதிபா இமாச்சலப் பிரதேசத்தை வென்று ராகுலுக்கு பரிசளிப்பதாக உறுதியளித்தார்.

author-image
Balaji E
New Update
இமாச்சல் தேர்தல் முடிவுகள்:  காங்கிரஸில் முதல்வர் ரேஸில் முன்னாள் முதல்வர் வீரபத்ரா மனைவிக்கு வாய்ப்பு

தேர்தல் முடிவு வெளியான வியாழக்கிழமை சிம்லாவில் உள்ள ஹோலி லாட்ஜ் தோட்டத்தில் தேர்தல் முடிவுகளைக் காட்டும் பெரிய டிவி திரை வைக்கப்பட்டது. நண்பகலுக்குப் பிறகு, இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் அக்கட்சியின் வெற்றியை முறையாக அறிவிப்பதற்காக, ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கூட்டம் நீல நிற விதானத்தின் கீழ் முற்றத்தில் கூடியது.

Advertisment

கூட்டம் அதிகமான நிலையில், பிரதிபா சிங் வெளியே வந்து வெற்றிச் சின்னத்தை காட்டினார். 66 வயதான அவர் கண்ணீரை அடக்கிக்கொண்டு, வெற்றியை தனது மறைந்த கணவரும் 6 முறை முதல்வராகவும் இருந்த வீரபத்ர சிங்குக்கு அர்ப்பணித்தார். இந்த முடிவுகள் பெரும்பாலும் அவரது பெயரில் நடத்தப்பட்ட ஒரு பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக இருந்தன. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஹோலி லாட்ஜின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாக இல்லாவிட்டாலும் பொருத்தமாக உள்ளது என்பதை வலியுறுத்தினார்.

சில மணிநேரங்களிலேயே காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கு உரிமை கோரிய மூன்று தீவிரப் போட்டியாளர்களில் பிரதிபா முதல்வர் பதவிக்கு முதலில் உரிமை கோரினார். “முதல்வரின் பெயர் அறிவிக்கப்படும்போது பார்ப்போம். (ஆனால்) இந்தக் குடும்பத்தை கட்சி புறக்கணிக்க முடியாது. அவர் (வீரபத்ரா) பெயரில்தான் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. நீங்கள் அவருடைய (வீரபத்ரா) பெயரையும் முகத்தையும் பயன்படுத்திவிட்டு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை. கட்சி மேலிடம் அப்படி செய்யாது” என்று அவர் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரதிபா, 9 முறை எம்.எல்.ஏ-வாகவும், 5 முறை எம்.பி-யாகவும், மாநிலத்திலும், இமாச்சலப் பிரதேச காங்கிரசிலும் மரியாதைக்குரிய ஆளுமையாக இருந்த மறைந்த வீரபத்ர சிங்கின் மனைவி என்பதால் தனது அரசியல் செல்வாக்கின் பெரும்பகுதியைப் பெறுகிறார். அவர் முதல் முறையாக 2004-ம் ஆண்டில் வீரபத்ராவால் காலியான மண்டி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்தல் அரசியலில் நுழைந்தார்.

2009 ஆம் ஆண்டு, இந்த தம்பதியினர் 1989-ம் ஆண்டுக்கு முய்ன் ஒரு அதிகாரியுடன் சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கை எதிர்கொண்டனர். வீரபத்ரா மற்றும் பிரதிபாா ஆகியோரின் குரல்களுடன் பரிவர்த்தனைகள் பற்றி விவாதிக்கும் டேப்களை காங்கிரஸ் தலைவர் விஜய் சிங் மகோடியா 2007-ல் வெளியிட்டார். விஜிலென்ஸ் பீரோ விசாரணைக்குப் பிறகு, 2009-ல் நீதிமன்றம் இருவர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால், இருவரும் இறுதியில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

2009 லோக்சபா தேர்தலில், வீரபத்ரா மீண்டும் மண்டி தொகுதிக்கு வந்தார். பிரதிபா போட்டியிடவில்லை. வீரபத்ரா ஹிமாச்சலில் முதல்வரானார். அவருடைய மண்டி தொகுதி காலி ஆன பிறகு, பிரதிபாா 2013-ல் மண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ.க-வின் ஜெய் ராம் தாக்கூரை 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பிரதிபா 2014 மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனால், கடந்த ஆண்டு, மற்றொரு இடைத்தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க எம்.பி ராம் ஸ்வரூப் சர்மாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவர் மீண்டும் எம்.பி. ஆனார்.

ஜூலை 2021-ல், வீரபத்ரா காலமானார். இந்த ஆண்டு ஜூன் மாதம், சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில், பல பிரிவுகளின் அழுத்தம் காரணமாக பிரதிபாவை மாநிலத் தலைவராக காங்கிரஸ் உயர்த்தியது.

இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான வியாழக்கிழமை அன்று பிரதிபாவும் அவருடைய மகன் விக்ரமாதித்யாவும் ஷிமா கிராமபுரப் பகுதிகளில் இருந்து எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்கள். இருவரும், வீரபத்ராவுக்குப் பின் ஒரு அடித்தளத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். அவருடைய பாரம்பரியத்தை, குறிப்பாக மண்டி அரச குடும்பத்திற்கு பல உள்ளூர் மக்களின் விசுவாசத்தை கட்டியெழுப்ப முயற்சி செய்கின்றனர். வீரபத்ரா இல்லாத நேரத்தில் இது பிரதிபாவின் முதல் தேர்தல், எனவே அவரது சொந்த செல்வாக்கு மற்றும் அதிகாரத்துக்கான சோதனை இது.

முன்னதாக, பிரதிபா செயல் தலைவராக இருந்தபோது, ஹர்ஷ் மகாஜன் போன்ற தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைந்த பிறகு இதையே அவதூறாக இருந்தது.

தேர்தலுக்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பிரதிபா, காங்கிரஸால் முதல்வர் முகத்தை அறிவிக்காததை நிராகரித்து, கட்சிக்கு ஒரு பெயரை வைத்தால் அது வயிற்றெரிச்சலையே விளைவிக்கும் என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவரான சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் அவரது இரண்டு முக்கிய போட்டியாளர்களாகக் காணப்படுகின்றனர்.

'ராணி சாஹிபா' என்று அழைக்கப்படும், "திக்கா சாஹப்" என்று அழைக்கப்படும் விக்ரமாதித்யாவுடன், வீரபத்ராவின் அரச பரம்பரை மரியாதை, பிரதிபா தனது சிவப்பு காரில் சிம்லாவை அடிக்கடி சுற்றி வருவதைக் காணலாம்.

சமீபத்தில், பிரதிபா விக்ரமாதித்யாவுடன் பாரத் ஜோடோ யாத்ராவில், மத்தியப் பிரதேசத்தில் கலந்து கொண்டார். மேலும், ராகுல் காந்திக்கு பாரம்பரிய இமாச்சலி தொப்பியை பரிசளித்தார். பிரதிபா இமாச்சலப் பிரதேசத்தை வென்று ராகுலுக்கு பரிசளிப்பதாக உறுதியளித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Congress Himachal Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment