Advertisment

ஹூண்டாய் விவகாரம்: வெளியுறவு அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது தென் கொரியா

தென்கொரிய தூதருக்கு சம்மன் அனுப்பி மத்திய அரசு அதிருப்தி தெரிவித்தது. தொன்கொரியாவின் சியோலில் உள்ள இந்தியத் தூதரகமும் தென்கொரிய அரசிடம் அதிருப்தி தெரிவித்தது.

author-image
WebDesk
New Update
ஹூண்டாய் விவகாரம்: வெளியுறவு அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது தென் கொரியா

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கில் இருந்து கருத்து வெளியாகி இருந்ததற்கு மத்திய அரசும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

Advertisment

பாகிஸ்தானில் ஹூண்டாய் டீலர் ஒருவர் காஷ்மீர் ஒற்றுமை தினத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவு ஹூண்டாய்பாகிஸ்தான் டிவிட்டர் கணக்கில் இருந்து வெளியானதால் சர்ச்சைக்குள்ளானது.

இதையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஹூண்டாய் நிறுவனம் எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் குறை கூற தொடங்கினர்.

#BoycottHyundai (ஹூண்டாய் தயாரிப்பை புறக்கணிப்போம்) என்ற ஹாஷ்டாக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

இதனிடையே இந்த சர்ச்சை பதிவுக்கு மத்திய அரசும் தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தது.

தென்கொரிய தூதருக்கு சம்மன் அனுப்பி அதிருப்தி தெரிவித்தது. தொன்கொரியாவின் சியோலில் உள்ள இந்தியத் தூதரகமும் தென்கொரிய அரசிடம் அதிருப்தி தெரிவித்தது.

இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.

இதையடுத்து தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சுங் இயூ-யாங் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்து பேசினார்.

அப்போது, சமூக வலைதளத்தில் வெளியான இந்தக் கருத்தால் இந்திய மக்களும் அரசும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறுக்காக

வருந்துகிறோம் என்றார் தென்கொரிய வெளியுறவு அமைச்சர்.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், தென்கொரிய வெளியுறவு அமைச்சர் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இருதரப்பு மற்றும்சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஹூண்டாய் விவகாரமும் எங்களது ஆலோசனையில் இடம்பெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹூண்டாய் தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இதற்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியச் சந்தையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.  தேசியத்தை மதிப்பதில் உறுதியாக இருக்கிறோம். ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாம் வீடு இந்தியா. உணர்வுகளை மதிக்காத கருத்துகள் வெளியிடப்படுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்தியா மற்றும் இந்தியர்களின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் மாருதி சுஸுக்கி இந்தியா நிறுவனத்துக்கு பிறகு அதிக அளவு கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஹூண்டாய் ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment