கொரோனா பெரும்தொற்று உலக நாடுகளில் மீண்டும் பரவ தொடங்கி உள்ளதால், இந்தியாவிலும் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கும் என்று அஞ்சப்படுவதால் காங்கிரஸ் நடத்தும் பாத யாத்திரையில் கொரோன வழிமுறைகள் பின்பற்ற பட வேண்டும் என்று சுகாதரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அதன் இரண்டு அலைகளும் மக்களுக்கு சவாலாக அமைந்தது. வேலை இழப்பு,தொற்றால் உயிரிழப்பு என்று இந்தியா முழுவதிலும் பல்வேறு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்நிலையில் தற்போது உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கி உள்ளது. இதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இநிந்லையில் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மத்திய சுகதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கும், ராஜஸ்தான் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றியே யாத்திரை நடக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தியவர்களே யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி ராஜன் சவுத்ரி கூறுகையில் “ குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி கொரோனா வழிமுறைகளை பின்பற்றினாறா? ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு ராகுலின் யாத்திரை பிடிக்கவில்லை. இதை திசை திருப்பவே இப்படி செய்கிறார்” என்று கூறியுள்ளார்.
மேலும் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் “ தற்போது கொரோனா விதிமுறைகள் என்று யாதேனும் இருக்கிறது. அப்படி கடை பிடிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.