பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
PSLV, ISRO

29 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்தபின்னர் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

Advertisment

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டது. அதன்படி 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டன.

முன்னதாக, முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுட்காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதியதாக செயற்கைக்கோளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து,, 1,425 கிலோ எடைகொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இந்த செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்படும், இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று 7 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய தயாராகி வருகிறது. ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்த செயற்கைகோள் மூலம், இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pslv Isro

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: