Advertisment

நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்... இண்டர்போல் அதிரடி அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Red Corner Notice to Nirav Modi

Red Corner Notice to Nirav Modi

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் மோசடியில் சிக்கியுள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்குக் திரும்பிக் கொண்டு வர சிபிஐ பல மாதங்களாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், அவர் இங்கிலாந்தில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இதனால், இங்கிலாந்து அரசிடம் இந்தியா, நிரவ் மோடியை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில், நிரவ் மோடியை இந்தியாவுக்கு கூட்டிச் செல்ல உள்ள சட்ட நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது. எனவே, சீக்கிரமே மோடியை சொந்த நாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என்று தெரிகிறது.

இது ஒருபுறமிருக்க, நிரவ் மோடி எங்குத் தலைமறைவாக இருக்கிறார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் கடைசியாக பிப்ரவரி மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கான ஆவணங்கள் இல்லை. அதேபோல, கடந்த மார்ச் மாதம் அவர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் நாடு விட்டு நாடு தப்பித்து ஓடும் நீரவ் மோடியை பிடிக்க இந்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

July 2018

இதனை தொடர்ந்து, நிரவ்மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது. இண்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இண்டர்போல் உறுப்பு நாடுகளிடம், நிரவ் மோடியின் இருப்பிடத்தை கண்டறியுமாறும் அவர் கண்டறியப்பட்டால் கைது செய்து நாடு கடத்த வேண்டும் என கோரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சர்வதேச அளவில் அவர் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலோ அடையாளம் காணப்பட்டாலோ அவரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்ய முடியும் என்பது முக்கியமான தகவல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment