Advertisment

பி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், விண்ணில் பாய்ந்தது!

author-image
Ganesh Raj
Jun 23, 2017 09:49 IST
New Update
satellite Cartosat-2, ISRO, PSLV

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., - சி 38 ராக்கெட் மூலம், 'கார்ட்டோசாட் - 2' செயற்கை கோள்களை இன்று விண்ணில் செலுத்தியது.  ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, காலை, 9:29 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதற்கான கவுன்டவுன், நேற்று காலை, 5:29 மணிக்கு தொடங்கியது. அனைத்து செயற்கை கோள்களும் வெற்றிகமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

712 கிலோ எடைகொண்ட 'கார்ட்டோசாட் - 2' செயற்கைகோள் புவியை கண்காணிக்கக்கூடியது. அமெரிக்கா, ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து, 29 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. அத்துடன் இந்தியாவின் நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டன. குறிப்பிடும் படியாக கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவரால் அந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டது.

#Isro #Sriharikota #Pslv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment