கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி, நாடு முழுவதும், சோதனை முயற்சியாக, இன்று(மார்ச் 22) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ‘மக்கள் ஊரடங்கு’ நடத்தப்படுகிறது.
தமிழகத்தில், மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு துவங்கியது. இந்த ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் அரசு பஸ்கள் ஓடாது என தமிழக அரசு அறிவித்தது. கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டிருக்கும் என அதன் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதன்படி, அரசு பஸ்கள் இயங்கவில்லை. ரயில்களும் இயக்கப்படவில்லை. ஓட்டல்கள், மார்க்கெட்கள், கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.












பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு அழைப்பிற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்த ஊரடங்கு உத்தரவு 23ம் தேதி காலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil