Advertisment

பெயரை மாற்ற பாஜக வலியுறுத்திய பிறகு குண்டூர் ஜின்னா கோபுரத்தில் மூவர்ணக்கொடி

இந்தக் கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஹிந்து வாஹினி அமைப்பினர் எனக் கூறிக் கொண்டு தடை உத்தரவை மீறி 3 பேர் குடியரசு தினத்தன்று வந்தனர்.

author-image
WebDesk
New Update
பெயரை மாற்ற பாஜக வலியுறுத்திய பிறகு குண்டூர் ஜின்னா கோபுரத்தில் மூவர்ணக்கொடி

ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூரில் ஜின்னா கோபுரம் அமைந்துள்ளது. இந்தக் கோபுரத்தின் பெயரை மாற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என பெயர் சூட்டுமாறு அந்த மாநில பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

Advertisment

இந்த நிலையில், இந்தக் கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஹிந்து வாஹினி அமைப்பினர் எனக் கூறிக் கொண்டு தடை உத்தரவை மீறி 3 பேர் குடியரசு தினத்தன்று வந்தனர்.

அவர்களுடன் 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களை போலீஸாரர் கைது செய்து காவலில் வைத்து அன்றைய தினமே விடுவித்தது.

இந்தச் சூழலில், குண்டூர் கிழக்கு தொகுதி எம்எல்ஏவும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான முகமது முஸ்தபா ஜின்னா கோபுரத்துக்கு மூவர்ணக்கொடியை வரைய நடவடிக்கை எடுத்தார்.

அவர் கூறுகையில், ‘பல்வேறு குழுக்களின் கோரிக்கையை ஏற்று இந்த கோபுரத்துக்கு மூவர்ணக்கொடியை பிரதிபலிக்கும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டது.  பிப்ரவரி 3-ஆம் தேதி இந்த கோபுரத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாஜகவினர் வகுப்புவாத மோதல்களை தூண்டுவதற்கு பதிலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாம்’ என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment