Advertisment

கர்நாடக தேர்தல்: சீட்டு விரும்பிகளிடம் இருந்து நிதி திரட்டும் காங்கிரஸ்

புதிய கட்சி அலுவலகம், கட்சி நிதி, தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது- டி.கே. சிவக்குமார்

author-image
WebDesk
New Update
congress

DK Shivakumar

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நிதியை சீட்டு விரும்பிகளிடம் இருந்து திரட்டும் முயற்சியில் கர்நாடக காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

Advertisment

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே. சிவக்குமார் புதன்கிழமை கூறுகையில், மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது அவர் உட்பட வேட்பாளர்கள் இரண்டு லட்சம் ரூபாய் டிமாண்ட் டிராப்டை (டிடி) டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

விண்ணப்பங்கள் நவம்பர் 5 முதல் 15 வரை தாக்கல் செய்யப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 5,000  செலுத்த வேண்டும் என்று சிவக்குமார் தெரிவித்தார். SC/ST சமூகங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு டிடியாக டெபாசிட் செய்யப்படும் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் நிதி, புதிய கட்சி கட்டடம் கட்டுவதற்கும், சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சி விளம்பரத்துக்கும் பயன்படுத்தப்படும்.

சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் கூட சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நானும் விண்ணப்பிக்க வேண்டும். நபரை விட கட்சி முக்கியமானது, என்று அவர் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வேட்பாளர்கள் டிக்கெட்டுகளுக்கு ஏன் டெபாசிட் செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் கூறுகையில், புதிய கட்சி அலுவலகம், கட்சி நிதி, தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. நாங்கள் எந்த தேர்தல் நிதியையும் பெறவில்லை. எல்லாவற்றையும் பாஜக முடக்குகிறது, அதனால் தான் குறைந்தபட்சம் கட்சிக்காரர்களாவது கட்சிக்கு நிதி திரட்ட வேண்டும் என்றார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை கவுரவிக்கும் வகையில் பெங்களூருவில் நவம்பர் 6-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று சிவக்குமார் தெரிவித்தார். அரண்மனை மைதானத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில், ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார்.

மேலும் சிவக்குமார், கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் காங்கிரஸில் சேர்க்கும் யோசனைக்கு நான் தயாராக இருப்பதாகக் கூறினார். இதற்காக ஒரு குழு உள்ளது. கட்சி சித்தாந்தத்தை ஏற்கும் எவரும் அதற்கு விண்ணப்பிக்கலாம். யாரை சேர்க்க வேண்டும், யாரை சேர்க்கக்கூடாது என்பதை அந்த குழு முடிவு செய்யும், என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment