Advertisment

வெடிமருந்து வைக்கப்பட்ட பழத்தை யானை தற்செயலாக சாப்பிட்டிருக்கலாம்: சுற்றுச்சூழல் அமைச்சகம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வெடிமருந்து வைக்கப்பட்ட பழத்தை யானை தற்செயலாக சாப்பிட்டிருக்கலாம்: சுற்றுச்சூழல் அமைச்சகம்

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை இறந்த வழக்கில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை தற்செயலாக யானை சாப்பிட்டிருக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

பாலக்காடு மாவட்டம் அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவை சேர்ந்த யானை ஒன்று உணவு தேடி கிராமம் ஒன்றுக்குள் புகுந்தது. கர்ப்பிணியான அந்த யானை, வெடிபொருட்கள் நிரம்பிய அன்னாசி பழத்தை உட்கொண்டுள்ளது. அந்த பழங்கள், யானையின் வாயில் வெடித்து நாக்கு மற்றும் வாய் பகுதிகளில் பெரும் சேதத்தை உருவாக்கின.

காயத்திற்கு இதமாக இருக்கும் என்று நினைத்த யானை, அருகில் இருந்த ஆற்றில் இறங்கி தண்ணீர் அருந்தியது. ஆனால் காயத்தில் தண்ணீர் படவும் வாய்பகுதி சீல் பிடித்துவிட்டது. அந்த யானையால் மேற்கொண்டு உணவு எதையுமே உண்ண முடியாமல் பசியால் வாடிய அந்த யானை நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டது.

மக்கள் பணியில் என்றும் தங்கம் தான்; கொரோனா மருத்துவர்களை நேரில் சந்தித்த தமிழிசை!

அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு நடத்திய விசாரணையில் தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யானை இறந்தது தொடர்பாக கேரள அரசு முழுமையாக அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டிருந்தது.

இந்நிலையில் யானை இறந்தது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் இணையமைச்சர் பாபுல் சுப்ரியா ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், "கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் யானை இறந்தது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை கர்ப்பிணி யானை தற்செயலாக சாப்பிட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

விரிவான விசாரணை அறிக்கையை கேரள அரசிடம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேரள அரசிடம் கேட்டு வருகிறோம். ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் தொடர்புடையவர்கள் மற்றர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.

ஆதலால், கேரள யானை இறந்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் தேவயற்ற, ஆதாரமில்லாத தகவல்களையும், வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம். அந்தப் போலியான செய்திகளையும் யாரும் சமூக ஊடகங்கள் வாயிலாக யாருக்கும் பரப்ப வேண்டாம்.

இந்த யானை இறந்தது தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி முடிக்கப்படும். குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்படும்.

கர்ப்பிணி யானை மிகவும் கொடூரமான முறையில் இறந்தது கண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் வேதனையும் வருத்தமும் அடைந்தது. பாலக்காட்டு வனப்பகுதியில் உள்ள மக்கள் பலமுறை இதுபோன்று காட்டுப்பன்றிகள் தங்கள் விளைநிலத்துக்குள் வராமல் தடுக்க பழத்தில் வெடிமருந்து நிரப்பிக் கொலை செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது" என்று பாபுல் சுப்ரியா தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment