ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க இந்திய ராணுவம் முடிவு

இந்திய ராணுவத்தில் பெண்களை ராணுவ போலீஸ் பிரிவில் முதன்முறையாக நியமிக்க இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது என உயர் அதிகாரி அஸ்வனி குமார் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தில் பெண்களை ராணுவ போலீஸ் பிரிவில் முதன்முறையாக நியமிக்க இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது என உயர் அதிகாரி அஸ்வனி குமார் தெரிவித்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராணுவ போலீஸாக பெண்களை நியமிக்க இந்திய ராணுவம் முடிவு

இந்திய ராணுவத்தில் பெண்களை ராணுவ போலீஸ் பிரிவில் முதன்முறையாக நியமிக்க இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது.

Advertisment

இந்திய ராணுவத்தில் பெண்கள் கல்வி, சட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ராணுவத்தில் ஜவான்களாக நியமிக்கும் பணி விரைவில் துவங்கும் என ராணுவ தளபதி பிபின் ராவத் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதன் முதல்படியாக ராணுவ போலீஸாக முதல்முறையாக பெண்களை நியமிக்க இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது.

ராணுவத்தில் நிலவும் பாலின பாகுபாட்டை ஒழிப்பதற்கான முக்கிய முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ உயர் அதிகாரி அஸ்வனி குமார் கூறியதாவது, “ராணுவ போலீஸில் 800 பெண்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருடத்திற்கு 52 பெண்கள் ராணுவ போலீஸாக நியமிக்கப்படுவர்.”, என தெரிவித்தார்.

Advertisment
Advertisements

பெண்களை ராணுவ போலீஸாக நியமிப்பதன் மூலம் ராணுவத்தில் பாலினம் காரணமாக நிலவும் குற்றங்களை விசாரிப்பதற்கு உதவிகரமாக அமையும் எனவும் அஸ்வனி குமார் கூறினார்.

இந்திய பாதுகாப்பு துறை முழு நேர பெண் அமைச்சராக அண்மையில் நிர்மலா சீதாராமன் முதன்முறையாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ராணுவத்தில் பெண்களை போலீஸாக நியமிக்க ராணுவம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Indian Army

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: