Advertisment

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்!

தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள நஜீம் ஜைதியின் பதிவிக்காலம் ஜுலை 6-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்!

நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாளை மறுநாள் (ஜுலை 6) அவர் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1975-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். மேலும், இவர் குஜராத்தின் தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். குஜராத்தின் கன்ட்லா துறைமுகத்தின் நிர்வாக இயக்குனராக 1999-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள நஜீம் ஜைதியின் பதிவிக்காலம் ஜுலை 6-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment