Advertisment

மக்களவை தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை: குலாம் நபி ஆசாத்

2024 மக்களவை தேர்தலுக்கு முன் பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை என காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ghulam Nabi Azad

Ghulam Nabi Azad

2024 மக்களவை தேர்தலுக்கு முன் பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை என காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Advertisment

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்து காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை என காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸில் இருந்து விலகி 'ஜனநாயக ஆசாத் கட்சி' என தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். இந்தநிலையில் ஆசாத் எதிர்க்கட்சி கூட்டணி குறித்தும், ராகுல் காந்தி குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நேற்று ( செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதன் பின் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் எதுவும் மாறவில்லை. வலுவான தலைவர்களைக் கொண்ட மாநிலங்களில் மட்டுமே நல்ல முடிவுகளை எதிர்பார்க்க முடியும். எந்த மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும், தோல்வி அடையும் என காங்கிரஸ் மத்திய தலைமையால் கூற முடியாது.

காங்கிரஸ் மத்திய தலைமை எந்த இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர்களால் யாரையும் தோற்கடிக்கவோ, வெல்லவோ முடியாது. மாநிலத் தலைமை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதைப் பொறுத்தே அமையும் என்று கூறினார்.

பல மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நல்ல உறவு கொண்டிருப்பதால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் நீங்கள் பங்கு வகிக்க நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, இப்போது யாரும் தேசிய லட்சியங்களை வளர்ப்பதாக நான் நினைக்கவில்லை. சில சமயங்களில், சில தலைவர்களுக்கு தேசிய லட்சியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இருப்பதாக நான் பார்க்கவில்லை. இந்த பெரிய நாட்டில் எங்களைப் போன்ற ஒரு தேசியக் கட்சி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அணுகுவது மிகவும் கடினம் என்று கூறினார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்த கேள்விக்கு, அது நடக்கப்போவதில்லை. அரசியல் அறிந்தவராக எனது பார்வை இது தான் என்றார்.

"இது என்னுடைய மதிப்பீடு. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. கடந்த 40-50 வருடங்களில் நான் அனைத்து அரசியல் கட்சிகளிடத்திலும், அதன் தலைவர்களிடத்திலும் வெவ்வேறு திறன்களில் பணியாற்றியுள்ளேன். கூட்டணிகள் - ஒவ்வொரு அரசியல் கட்சியும் அந்தந்த மாநிலங்களில் மகிழ்ச்சியாக இருப்பதாக என்னால் சொல்ல முடியும். மாநில கட்சிகள் தங்கள் அதிகார வரம்பைத் தாண்டிச் சென்றால் அவர்கள் தோற்றுவிடுகிறார்கள்" என்றார்.

அப்பொழுது, 2024-ல் பாஜகவுக்கு ஒன்றுபட்ட சவால் இருக்காது என்று கூறுகிறீர்களா என்று கேட்டதற்கு, எண்ணிக்கையைப் பொறுத்து தேர்தலுக்குப் பிந்தைய சவாலாக இருக்கலாம் என்றார்.

"சவால்கள் உள்ளன… நாங்கள் பார்த்தோம். விருப்பம் இருந்தால், எண்கள் இருந்தால். 1991 மற்றும் 2004ல் பார்த்தோம். 1998 மற்றும் 1999ல் அடல்ஜி (பிஹாரி வாஜ்பாய்) கூட, தேர்தலுக்குப் பின் மக்கள் ஒன்று சேர்வதைப் பார்த்திருக்கிறோம். காங்கிரஸ் அதை இரண்டு முறை செய்துள்ளது. அடல்ஜி இரண்டு முறை செய்துள்ளார். மோடிஜி கூட கூட்டணி வைத்திருந்தார், அவருக்கு அது தேவை இல்லை என்றாலும். அவருக்கும் சில கூட்டாளிகள் உள்ளனர். வித்தியாசம் என்னவென்றால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்று தான்" உள்ளது.

மக்கள் ஒரு விஷயத்தை பகுப்பாய்வு செய்ய மாட்டார்கள். ஒரு கட்சி மற்றொரு கட்சிக்கு எதுவும் சேர்க்க முடியாது. மேற்கு வங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கூட்டணி என்றால் வங்காளத்தில் காங்கிரஸுக்கு என்ன? பூஜ்ஜிய பதவிகள். அதனால் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸுக்கு எப்படி பலன் தரும்? 42 இடங்களில் காங்கிரசுக்கு 5 அல்லது 10 இடங்களை ஏன் அவர் (மம்தா பானர்ஜி) விட்டுக் கொடுக்க வேண்டும்? பரஸ்பர கூட்டணி இருக்க வேண்டும். கூட்டணியில், நான் சில வாக்குகளை அனுப்ப முடியும்… நீங்கள் அவருடைய மாநிலத்தில் சில வாக்குகளை அனுப்ப வேண்டும். ஆனால் அப்படி இல்லை. காங்கிரஸால் கட்சிகள் தோற்றுப்போன மாநிலங்களும் உள்ளன என்றார்.

இந்தநிலையில், ஆசாத் தனது புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி சில வார்த்தைகளை எழுதியுள்ளார். இதை மையப்படுத்தி கேள்வி எழுப்பபட்டது. தேர்தல் நேரத்தில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியம் உள்ளதா என்று கேட்டதற்கு, ஜம்முவில் நான் எந்த அரசியல் கட்சியுடனும் கைகோர்க்கப் போவதில்லை என்று கூறினார்.

தொடர்ந்து சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்யச் சென்ற போது அவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இது குறித்து ஆசாத் சாடி பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi Gulam Nabi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment