/indian-express-tamil/media/media_files/2025/09/27/us-and-uk-dreffent-2025-09-27-18-51-50.jpg)
அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில், இந்தியர்கள் எந்த இடத்தைத் தங்கள் வாழ்க்கைக்கு அதிகமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒரு பெரிய தரவுத் தேவை. ஆனால் தற்போது இந்தியர்கள் பலரும் அமெரிக்காவை விட ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு (United Kingdom - UK) செல்ல விரும்புகிறார்கள். இதற்குக் காரணங்களில் ஒன்று, டொனால்ட் டிரம்ப் அரசு எச். 1பி (H-1B) விசா கட்டணம் உயர்த்தப்பட்டதும், அமெரிக்க அரசின் மற்ற கடுமையான கொள்கைகளும்தான்.
அமெரிக்காவை விட பிரிட்டன் ஏன் சிறந்தது? அனுபவம் சொன்ன நபர்
ஒரு நபர் ரெடிட் தளத்தில் (Reddit) அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இடங்களிலும் வாழ்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, அமெரிக்காவை விட பிரிட்டன் ஏன் சிறந்தது என்பதை விளக்கியுள்ளார். இந்த பதிவு பல பயனர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது.
அந்த ரெடிட் பயனர் "ஸ்டான்ஃபோர்டில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு நான் அமெரிக்காவில் சிறிது காலம் வாழ்ந்தேன். பின்னர், இங்கிலாந்துக்குச் சென்று ஆக்ஸ்ஃபோர்டில் முதுகலைப் பட்டம் பெறுவது என்ற ஆதாரபூர்வமான முடிவை எடுத்தேன்," என்று அந்த பதிவில் கூறியுள்ளார். மேலும், பிரிட்டனுக்குச் செல்வதற்கு முன், தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் இதற்கு எதிராக பேசியதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் அமெரிக்கா
இங்கிலாந்துக்கு மாறியதற்கான முக்கிய காரணங்களை விளக்கிய அவர், அமெரிக்காவில் இருந்தபோது நேர மாறுபாடு காரணமாகத் தான் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்க விரும்பியதாகவும் கூறினார். நான் அமெரிக்காவைக் கண்டுகொள்ளாமல் இருப்பது சற்றுப் பைத்தியக்காரத்தனம் என்று குடும்பத்தினரும் நண்பர்களும் நினைத்தனர், ஆனால் எனது காரணம் இதுதான்: தூரம் மற்றும் நேர மண்டலம் ஆகிய இரண்டிலும் குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்க விரும்பினேன். நேர வித்தியாசத்தின் காரணமாக நான் என் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அதிகம் பேசவில்லை, அது என்னைப் பெரிதும் பாதித்தது," என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் இருக்கும்போது உலகைச் சுற்றிப் பயணம் செய்வது கடினம், ஏனெனில் அது உலகின் பிற பகுதிகளிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது: பிரிட்டனில் வாழ்ந்ததன் மூலம் பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் மற்றும் லிஸ்பன் போன்ற இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ள முடிந்தது என்பதை நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள எச்1பி (H-1B) விசா நெருக்கடியைக் குறிப்பிட்ட குறிப்பிட்ட அவர், இந்தியர்களுக்கு "எவ்வளவு காத்திருக்க வேண்டும்" என்று தெரியாமல், எச்1பி (H-1B) காரணமாக அமெரிக்க குடியுரிமை பெற பலர் போராடி வருவதையும் சுட்டிக்காட்டினார். அதேசமயம் ஸ்பான்சர்ஷிப் வழங்குவதற்காக நான் ஒரு முதலாளியை அண்டி இருக்க விரும்பவில்லை," என்றும் அவர் கூறினார்.
அதேபோல் இங்கிலாந்துக்குச் சென்றதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இது நான் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்றாகும். நான் கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசித்து வருகிறேன், குறிப்பாக மேற்கூறிய அனைத்து அம்சங்களிலும் நான் உண்மையாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இங்கிலாந்துக்குச் செல்பவர்களை அந்த முடிவை எடுக்கச் சொல்லி, க்ளோபல் டேலண்ட் விசா ("Global Talent Visa) குறித்து ஆராயுங்கள். நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும், மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். ஒரு பயனர், இங்கிலாந்து நம்பப்படுவது போல் சிறப்பானது அல்ல என்று கூறினார். "குறைந்த ஊதியங்கள் மற்றும் இப்போது அதிக குடிவரவு எதிர்ப்பு மனப்பான்மை. அமெரிக்கர்கள் அதிக லட்சியம் கொண்டவர்கள், ஆனால் இங்கிலாந்தில் $100k-க்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஒரு ஒட்டுண்ணி போல் பார்க்கப்படுகிறார்கள்," என்று கூறியுள்ளனர்.
இங்கிலாந்து அமெரிக்காவை விடச் சிறப்பாக இருக்கும் ஒரே விஷயம், டிஷூம், ஜிம்கானா மற்றும் த்ரிஷ்னா ஆகிய இடங்களில் கிடைக்கும் இந்திய உணவுதான். மற்ற எல்லா அம்சங்களிலும் இங்கிலாந்து மோசமானது. வேலைவாய்ப்பு, சம்பளம், சுகாதாரப் பாதுகாப்பு, வாழும் செலவு என எதுவாக இருந்தாலும்..." என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
வேலை கிடைக்காமல் இங்கிலாந்தில் இருந்து திரும்பிச் சென்றவர்கள், மற்றும் முதலாளிகளிடமிருந்து எந்தக் குடிவரவு ஆதரவும் கிடைக்காதவர்கள் பற்றிய பதிவுகளையும் இந்த குழுவில் படியுங்கள். படிப்புக்காக ஒருபோதும் இங்கிலாந்துக்குச் செல்லாதீர்கள். அப்படி நீங்கள் சென்றால், உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறை செய்வீர்கள்," என்று அந்தக் கருத்து மேலும் கூறியது.
மற்றொரு நெட்டிசன், இந்த ரெடிட் பயனரை ஒரு "இங்கிலாந்து அரசாங்கத்தின் நபர்" என்று குறிப்பிட்டுள்ளார். "இந்த நபர் இங்கிலாந்து அரசாங்கத்தில் பணிபுரிகிறார் என்று 100% உறுதியாக நம்புகிறேன். நீங்கள் வேலை செய்யும் இந்தியராக இருந்தால், அங்குச் செல்லாதீர்கள், தேசி ஆண்களுக்கு அங்கே ஒரு லோ க்ளாஸ் செல்லிங் (low glass ceiling) உள்ளது. வரித் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தவறுகளுக்காக இந்தியர்களை அவர்கள் நாடுகடத்தினர். ஒரு பிரிட்டனை திருமணம் செய்வதன் மூலம் கூட நீங்கள் குடியுரிமை பெறுவதில்லை," என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.